திருப்பூர், ஜன. 6 - மக்கள் விரோத ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக ஏப்ரல் 5 ஆம்தேதி தலைநகர் தில்லி யில் விச, விதொச, சிஐடியு சங்கங்கள் இணைந்து நடத்தும் பேரணியின் நோக்கங் களை வீடு வீடாக கொண்டு சேர்ப்போம் என திருப்பூர் மாண்டல கருத்தரங்கில் சூளுரை ஏற்கப்பட்டது. நாசகர தொழிலாளர் சட்ட தொகுப்புகளை கைவிட வேண்டும், விவசாயிகளையும் விவ சாயத்தையும் சீர்குலைக்கும் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை கைவிட வேண்டும். கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தை சீர் குலைக்காமல் அனைத்து பகுதி மக்களுக் கும் வேலை வாய்ப்பை உறுதிப்படுத்த வேண் டும். மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும் மத வெறி பிற்போக்கு கொள்கைகளை கைவிட வேண்டும் என வலியுறுத்தி வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி இந்திய தொழிற்சங்க மையம், அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆகியவை இணைந்து தில்லியில் 10 லட்சம் பேர் பங்கேற்கும் பிரம்மாண்டமான பேர ணியை நடத்த முடிவு செய்துள்ளன. மோடி அரசின் மக்கள் விரோத கொள்கை களை அம்பலப்படுத்தி நடத்தப்படும் பேர ணியின் செய்தியை நாடு முழுவதும் பிரச் சாரம் செய்வது என்றும் முடிவு செய்யப் பட்டது. இதன்தொடர்ச்சியாக, வெள்ளி யன்று திருப்பூர் காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் மண்டல அளவிலான கருத்த ரங்கம் நடத்தப்பட்டது. இதில், கோவை, நீல கிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த சிஐடியு, விவசாயி கள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் மாவட்ட மற்றும் நகர, கிரா மப்புற நிர்வாகிகள், முன்னணி ஊழியர்கள் என சுமார் 400 பேர் பங்கேற்றனர்.
இக்கருத்தரங்கிற்கு சிஐடியு திருப்பூர் மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட செயலாளர் ஆர்.குமார் வரவேற்றார். விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட பொருளாளர் பாலதண்டபாணி, சிஐடியு திருப்பூர் மாவட்ட பொருளாளர் ஜி.சம்பத், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் ஆர்.மணியன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கருத்த ரங்கில், அகில இந்திய விவசாயிகள் சங்க தமிழ் மாநில பொதுச் செயலாளர் சாமி. நட ராஜன், சிஐடியு மாநிலச் செயலாளர் கே.சி. கோபி குமார், விவசாய தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கே.அருள்செல் வன், விவசாய தொழிலாளர் சங்க ஈரோடு மாவட்ட செயலாளர் கே.சண்முகவள்ளி ஆகி யோர் தில்லி பேரணியின் நோக்கத்தை விளக்கி கருத்துரை ஆற்றினர். 10 லட்சம் பேர் பங்கேற்கும் தில்லி பேர ணியின் 14 அம்ச கோரிக்கைகளையும், மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளையும் அனைத்து மாவட்டங்களிலும் வீடு வீடாக மக்களைச் சந்தித்து விளக்குவது என்று இக் கருத்தரங்கில் உறுதி ஏற்கப்பட்டது. முடி வில், விதொச திருப்பூர் மாவட்ட தலைவர் அ. சண்முகம் நன்றி கூறினார்.