districts

img

மலைவாழ் மக்களுக்கு எல்லா வசதிகளும் கிடைக்கும் வகையில் செயல்படுகிறோம்: அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ்

உடுமலை, மார்ச் 5- மலைப்பகுதியில் வாழும் மக்க ளுக்கு எல்லா வசதிகளும் முழுமையா  கிடைக்கும் வகையில் அரசு செயல்படு வதாக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்  என்.கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார்.  உடுமலையில், கலைஞர் நூற் றாண்டு விழாவை முன்னிட்டு, வரு வாய்த்துறையின் சார்பில்  1,205  பயனா ளிகளுக்கு ரூ.2.9 கோடி மதிப்பீட்டில் விலையில்லா இ - பட்டா, வன உரிமைப்  பட்டா மற்றும் முதலமைச்சரின் மருத் துவ காப்பீடு திட்ட அட்டைகள் ஆகிய வற்றை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்  மற் றும் மாண்புமிகு  ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வ ராஜ் ஆகியோர் திங்களன்று வழங்கி னார்கள்.  இவ்விழாவில் ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வ ராஜ் பேசுகையில், உடுமலைப்பேட்டை பகுதியில் பொதுமக்களிடமிருந்து வீட்டு மனை பட்டா கேட்டு விண்ணப் பம் மற்றும் வீட்டு பராமரிப்பு விண்ணப் பங்கள் தான் அதிகமாக வருகிறது. முத் தமிழறிஞர் கலைஞர் கட்டிக் கொடுத்த வீடுகளை பராமரிப்புக்காக நேரில் சென்று பார்வையிட்டும் வருகிறோம்.  2   லட்சம் வீடுகள் பராமரிப்பு பணிகள்  செய் யப்படவுள்ளது. உடுமலைப்பேட்டை பகுதியில் அதிகமாக மலைப்பகுதி உள் ளதால் வன பட்டா வழங்குவது அவ்வ ளவு சதாரணம் கிடையாது. மேலும்  முதல்வர் உத்தரவின் அடிப்படையில் அதிகப்படியான முகாம்கள் நடத்தி ஓர ளவுக்கு பட்டா கொடுக்கப்பட்டு வருகி றது.  வன பட்டா மலைப்பகுதியில் வாழக்கூடிய மக்களுக்கு எவ்வளவு அவசியம் என்பது அனைவருக்கும் தெரியும். மலைப்பகுதியில் வாழும் மக் களுக்கு எல்லா வசதிகளையும் முழு மையாக கிடைக்கும் வகையில் நடவ டிக்கை எடுக்கப்படும்.  திருமூர்த்திமலை   பகுதிக்கு விரையில் ரூ.47 லட்சம் மதிப் பீட்டில் தார்ச்சாலை வசதி செய்ய இருக் கிறோம், எனக்கூறினார். இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் உட் பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் பங் கேற்றனர்.