சாலை பணியின்போது குடிநீர் குழாய் சேதம்
நாமக்கல், நவ.13- பரமத்திவேலூர் அருகே தார்ச்சாலை அமைக்கும் பணி யின்போது, அங்கு பதிக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய்கள் சேதமடைந்ததால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீரின்றி அவதி யடைந்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி யிலிருந்து ஜேடர்பாளையம் வரை தார்ச்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. தார்ச்சாலையின் ஓரத்தில் மாணிக்கநத்தம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு, அந்தக் குழாயின் வழியாக பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தார்ச் சாலை விரிவாக்க பணிக்காக தார்ச்சாலையின் ஓரத்தில் நெடு கிலும் குழியை ஜேசிபி இயந்திரம் மூலம் தோண்டியபோது, குடிநீர் குழாய்கள் உடைந்துவிட்டது. இதனால் மாணிக்க நத்தம் ஊராட்சி பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் விநியோ கம் செய்வது தடைப்பட்டுள்ளது. குடிநீர் குழாய் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தற்பொழுது தான் லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து போடப்பட்டது. இதுகுறித்து நெடுஞ் சாலைத்துறை அதிகாரியிடம் அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேபோல் பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர்களிட மும் குடிநீர் குழாய் உடைக்கப்பட்டு இருப்பது குறித்து ஊராட் சித் தலைவர் வேலுசாமி புகாரளித்தார். ஆனால், இதுவரை அதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து, பழுதடைந்த குடிநீர் குழாய்களை மாற்றி, பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண் டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.
முன்னாள் ராணுவ வீரர்களுக்கான குறைதீர்ப்பு முகாம்
கோவை, நவ.13- கோவையில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான குறை தீர்ப்பு முகாம் ஞாயிறன்று நடைபெற்றது. மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் மற்றும் தக்ஷின் பாரத் ஏரியா சார்பில் முன்னாள் ராணுவத்தினர், உயிரிழந்த ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கான குறைதீர்ப்பு முகாம் கோவை எஸ்.என்.ஆர் கலை அரங்கத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவத்தினர், உயிரிழந்த ராணுவ வீரர்களின் மனைவிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, ராணுவ உயர் அதிகாரிகளிடம் தங்களது குறை களை தெரிவித்தனர். இதில் ஓய்வூதியம், மருத்துவக்காப் பீடு, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் உள்ள குறைகளை முன்னாள் ராணுவ வீரர்கள் கோரிக்கைகளாக முன் வைத்த னர். இதுகுறித்து கோவை மாவட்ட முன்னாள் ராணுவ வீரர் கள் நலச்சங்கத்தின் மாவட்ட தலைவர் பாஸ்கரன் கூறுகை யில், இந்த குறைதீர்ப்பு முகாமில் நீண்டகால கோரிக்கை யாக கோவையில் போர் நினைவு சின்னம் அமைத்தல், வீட்டு வரியில் இருந்து விலக்கு, சுங்கச்சாவடி கட்டணத்தில் இருந்து விலக்கு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை ஆகியவை வலியு றுத்தப்பட்டுள்ளன, என்றார். இந்த குறை தீர்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன், மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் மற்றும் ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மழையால் வெங்காயம் பயிர் சேதம்
நாமக்கல், நவ.13- நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் வெங்காய பயிர்கள் சேதமடைந்துள்ளன. நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள நடுப்பட்டி, சவுதாபுரம், நாச்சிப்பட்டி அளவாய்ப் பட்டி, அத்தனூர், சப்பையாபுரம் மற்றும் மின்னக்கல் ஆகிய பகுதிகளில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வெங்காயம் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் விவசாயிகள் எதிர்பார்த்தது போல் நல்ல மழை பெய்ததால், வெங்காய விளைச்சல் அதிகரித்தது. ஆனால், கடந்த சில வாரங் களாக பெய்து வரும் தொடர் மழையால் வெங்காய உற் பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மழைக் காலங்களில் வெங்காய வயல்களில் மழைநீர் தேங்கி வெங்காயம் அழுகும் நிலை உருவாகி கோழிக்கால் என்னும் திருகல் நோய் வரத் தொடங்கியுள்ளது. மேலும், நடப்பட்ட வெங்காயத்தின் தோல்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படு வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து நடுப்பட்டி விவசாயிகள் கூறுகையில், ஒரு ஏக் கர் நிலத்தில் வெங்காயம் பயிர் செய்ய மட்டும் ரூ.40 ஆயிரம் செலவாகிறது. ஆனால், தற்போது வெங்காயம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் வெங்காயம் நடவு செய்து ஒரு மாதத்திலேயே அதிக நோய் பாதிக்கப்பட்டு முற்றிலும் அழி யும் நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு மழைக்காலங்களில் உருவாகும் திருகல் நோய்க்கு உரிய மருந்து கண்டுபிடித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று மின் தடை
அவிநாசி, நவ.13- கானூர் புதூர், பசூரில் ஆகிய துணை மின் நிலையங் களில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்ப தால் கீழ்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (நவம்பர் 14) காலை 9 மணி முதல மாலை 4 மணி வரை மின் விநி யோகம் இருக்காது என அவிநாசி மின் வாரியத்தினர் அறிவித் துள்ளனர். மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்: கானூர், அல்லப் பாளையம், கஞ்சப்பள்ளி, ராமநாதபுரம், செட்டிபுதூர், ஆலத்தூர், தொட்டிபாளையம், குமாரபாளையம், மொன்டி பாளையம், தாசராபாளையம், ஆம்போதி, பசூர் ஒரு பகுதி, பெத்தநாயக்கன்பாளையம் ஒரு பகுதி. பசூர், பூசாரிபாளையம், இடையர்பாளையம், செல்லனூர், ஆயிமா புதூர், ஒட்டர்பாளையம், ஜீவா நகர், அன்னூர் மேட்டுப்பாளையம், மேட்டுக்காடு புதூர், அம்மா செட்டிபுதூர், புதுப்பாளையம், பூலுவபாளையம்.
தொடர் மழையால் பாதிப்பு இருளில் மூழ்கிய மலை கிராமங்கள்
திருப்பூர், நவ. 13 - திருப்பூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மலைவாழ் மக்களின் கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளன. திருமூர்த்தி மலை உள்பட பல்வேறு மலைவாழ் மக்கள் செட்டில்மெண்ட் பகுதிகளில் சோலார் மின் விளக்குகளும் எரி வதில்லை. மலைவாழ் மக்கள் மண்ணெண்ணெய் விளக்கை பயன்படுத்தி வந்தனர். அதுவும் தற்போது பயன்படாத சூழ் நிலையில் உள்ளது. ரேஷன் கடைகளில் 5 லிட்டர் மண்ணெண் ணெய் வழங்கி வந்தனர். ஆனால் தற்போது 1 லிட்டர் மண் ணெண்ணெய் தான் வழங்குகின்றன. இதனால் போதிய அளவு மண்ணெண்ணெய் கிடைக்காமல் தங்கள் குடியி ருக்கும் வீடுகளில் மன்னனை விளக்குகளையும் எரிய வைக்க முடியாமல் இருளில் தவித்து வருகின்றனர். எனவே மலைவாழ் மக்களுக்கு 5 லிட்டர் மண் ணெண்ணெய் வழங்கவும், வன உரிமை சட்டப்படி மலைவாழ் மக்கள் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமாறு திருப்பூர் மாவட்டம் மலைவாழ் மக்கள் சங்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மக்கள் நீதி மன்ற முகாமில் ரூ.1.88 கோடி உடனடித் தீர்வு
அவிநாசி, நவ. 13- அவிநாசியில் நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதி மன்றத்தில், 315 வழக்குகளுக்கு ஒரு கோடியே 88 லட்சம் ரூபாய்கான உடனடித் தீர்வு காணப்பட்டது. அவிநாசி சார்பு நீதி மன்றத்தில் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதி மன்றத்திற்கு, சார்பு நீதி மன்ற நீதிபதி சுரேஷ்குமார் தலைமை வகித் தார். மாவட்ட உரிமையல் நீதிமன்ற நீதிபதி வடிவேல், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சபீனா, ஊத்துக்குளி மாவட்ட உரிமையியல், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தரணிதரன், ஓய்வு நீதிபதி பத்நாபன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். இதில் 281 மோட்டார் வாகன சிறு வழக்குகள், காசோலை வழக்கு கள் 9, காப்பீட்டு வழக்குகள் 11, சொத்து வழக்குகள்14 என 315 வழக்குகள் ரூ.1 கோடியே 88 லட்சத்து 72 ஆயிரத்து 548க்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
பனியன் உற்பத்தியாளரை ஏமாற்றிய நூல் வியாபாரியிடம் இருந்து ரூ.80 ஆயிரம் மீட்பு
திருப்பூர், நவ.13 - நூல் ஏற்றுமதி செய்வதாக கூறி திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த தொழி லதிபர் ஏமாந்த ரூ.80 ஆயிரம் பணம் திரும்ப பெற்று கொடுக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், தாரபுரத்தை சேர்ந்த வர் கார்த்திகேயன். இவர் தாராபுரம் பகுதியில் சொந்தமாக பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி கார்த்திகேயனின் செல்போன் எண்ணிற்கு அழைத்த அடையாளம் தெரியாத நபர், தான் கம்பெனிகளுக்கு நூல் மொத்தமாக ஏற்றுமதி செய்வதாக கூறியுள்ளார். அதனை நம்பி கார்த்திகேயன் தனது கம்பெனிக்கு நூல் ஆர்டர் செய்துள்ளார். பின்னர் நூல் ஏற்றுமதி செய்ய அந்த நபர் ரூ.80 ஆயிரம் பணம் கேட்டுள்ளார். அதனை நம்பி கார்த்திகேயன் ரூ.80 ஆயிரம் பணத்தை தனது வங்கி கணக்கிலிருந்து அவருக்கு அனுப்பி யுள்ளார். பின்னர் தனக்கு நூல் கிடைக் காததால் கார்த்திகேயன் சம்மந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். ஆனால் அந்த நபர் கார்த்திகேயனுக்கு பணத்தை திருப்பி தராமலும், நூலை ஏற்று மதி செய்யாமலும் ஏமாற்றி வந்துள்ளார். பின்னர் கார்த்திகேயன் இது தொடர்பாக சைபர் கிரைம் இணையதளத்தில் ஆகஸ்ட் 22ஆம் தேதி புகார் கொடுத்துள்ளார். சைபர்கிரைம் போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு கார்த்திகேயன் பணம் அனுப்பிய நபர் வெள்ளகோவிலை சேர்ந்த ரகுபதி என கண்டுபிடித்து அவரிடமிருந்து ரூ.80 ஆயிரம் பணத்தை மீட்டு கார்த்தி கேயனுக்கு பெற்று கொடுத்தனர். எனவே தெரியாத நபர்களை நம்பி ஆன்லைனில் வியாபாரம் செய்வதை தவிர்குமாறு திருப்பூர் மாவட்ட சைபர்கிரைம் போலீசார் தொழில்துறையினரை அறிவு றுத்தி உள்ளனர். மேலும் இணையம் வாயிலாக பண மோசடி தொடர்பாக 24 மணி நேரத்திற்குள் 1930 என்ற இலவச அழைப்பு எண்ணை அழைக்குமாறும் அல்லது சைபர் ரைம் புகார்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்து மாறு காவல்துறையினர் கேட்டுக் கொண் டுள்ளனர்.
வெள்ளை அட்டைக்கு தட்டுப்பாடு: விதை உற்பத்தி முடக்கம்
தாராபுரம், நவ.13- விதை உற்பத்திக்கு தேவையான வெள்ளை அட்டைக்கு தட்டுபாடு நிலவுவதால், அதை தீர்க்க நடவடிக்கை மேற் கொள்ள வேளாண்மை துறை செயலாளருக்கு மனு அனுப்பப் பட்டுள்ளது. இதுதொடர்பாக தாராபுரம் விதை உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகி காளிதாஸ், தமிழ்நாடு வேளாண்மைதுறை செய லாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைப்ப தற்காக விதைச்சான்று இயக்குனர் அலுவலகம் மூலம் செயல் படும் உதவி இயக்குனர் அலுவலகங்கள் வாயிலாக ஆய்வு கள் மேற்கொள்ளப்பட்டு விதைச்சான்று அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் விவசாயிகள் பயன்படுத்தும் முழு முதல் இடு பொருளான நெல் உள்ளிட்ட பயிர்களின் விதை சான்று செய்ய தேவையான வெள்ளை நிற அட்டைக்கு தட்டுப்பாடு நிலவு கிறது. விதை சான்று உதவி இயக்குனர் அலுவலகத்தில் பணி யாற்றும் வேளாண் அலுவலர்கள் தனியார் நெல் விதை பண்ணைகளில் ஆய்வு செய்து வெள்ளை நிற அட்டையில் கையெழுத்து போட்டு ஒப்புதல் வழங்கிய பிறகு விற்பனைக்கு ஆதார நெல் விதைகள் அனுப்பப்படும். தமிழக அரசு விதைச்சான்று துறைக்கு உரிய காலக்கெடு வில் வெள்ளை நிற அட்டைகள் சப்ளை செய்யாதால் விதை உற்பத்தி மாநிலம் முழுவதும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் முடங்கி உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு உரிய பருவ காலத்தில் சான்று பெற்ற ஆதார விதைகள் கிடைப்பதில் தாம தம் ஏற்படுகிறது. திருப்பூர் உள்பட அனைத்து மாவட்டங்களி லும் உள்ள விதை சான்று உதவி இயக்குனர் அலுவல கங்களில் வெள்ளை நிற அட்டை விநியோகம் கிடைக்காததால் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. வடகிழக்குப் பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் விதை தேவை ஏற்படும் போது சான்று பெற்ற விதைகள் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் விநியோகம் செய்ய இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள் ளது. எனவே, விதை சான்று துறை, வேளாண்மை துறை மற்றும் எழுது பொருள் அச்சுதுறையினர் இணைந்து இந்த வெள்ளை நிற அட்டை தட்டுப்பாட்டை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட் டுள்ளது.
சுவர் இடிந்ததில் கல்லூரி மாணவி காயம்
கோவை, நவ.13- வடவள்ளி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் கல் லூரி மாணவி காயமடைந்தார். கோவை மாவட்டம், வடவள்ளியை அடுத்த பொம்மனாம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், கனகலட்சுமி தம்பதியினர். ரவிச்சந்திரன் உயிரிழந்துவிட்ட நிலையில், கனகலட்சுமி தனது மகன் மற்றும் கல்லூரியில் படிக்கும் 17 வயது மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கோவை யில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வரும் நிலை யில், கல்லூரி மாணவி தனது வீட்டில் சிமெண்ட் சீட்டால் அமைக்கப்பட்ட அறையில் பாத்திரங்களை கழுவிக் கொண்டி ருந்தார். அப்போது அவரது வீட்டின் அருகில் பயன்பாடற்ற நிலையிலிருந்த வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து மாணவி மீது விழுந்தது. இதில் மாணவியின் கண் மற்றும் பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அருகிலிருந்தவர்கள் மாணவியை மீட்டு கல்வீரம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத் துக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து அவர் மேல் சிகிக் சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மாணவிக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சர்க்கரை நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
சேலம், நவ.13- சேலம் காவேரி மருத்துவ மனையில் “டிஸ்யூம் டிஷ் யூம் டயாபட்டீஸ்” என்ற சர்க் கரை நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சர்க்கரை நோய் குறித்த பரிசோதனைகள் ரத்த நாள ஸ்கேன்கள், பாதம் சம்பந்தப்பட்ட ஸ்கேன் கள் மற்றும் பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட் டது. மேலும், டயாபட்டிஸ் சம் பந்தப்பட்ட மருத்துவ உபக ரணங்களுக்கு சிறப்பு தள்ளு படி கண்காட்சியில் வழங்கப் பட்டது. இதில், ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.