districts

img

வட்டமலைக்கரை ஓடை தடுப்பணையில் 25 ஆண்டுக்கு பின் தண்ணீர் திறப்பு

திருப்பூர், மார்ச் 9- வறட்சி மிகுந்த காங்கேயம் வட் டாரத்தில் வட்டமலைக்கரை ஓடை  தடுப்பணையில் 25 ஆண்டுகளுக் குப் பின் விவசாயப் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள் ளனர். திருப்பூர் மாவட்டம், வெள்ள கோவில் அருகே உள்ள உத்தமபா ளையத்தில் 700 ஏக்கர் பரப்பள வில், வட்டமலைகரை ஓடையை தடுத்து இந்த அணை 34.50 அடி உயரத்தில், 24.75 அடி தண்ணீர்  தேங்கும் வகையில் கட்டப்பட்டது. மேலும் அணையில் 0.27 டி.எம்.சி இருப்பு வைக்கும் வகை யிலும், 6043 ஏக்கர் பாசனம் பெறும்  வகையில் இடது வலது கால்வாயு டன் கட்டி முடிக்கப்பட்டது.  கடந்த 1980 முதல் 1991 வரை இரு முறை அணை நிரம்பி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பின் கடந்த 1996ஆம் ஆண்டுக்கு  பிறகு தண்ணீர் வரத்து இல்லாத தால் அணை காய்ந்து போனது. விவசாயிகள் தொடர்ந்து தண் ணீர் திறக்கக் கோரி போராட்டம் நடத்தி வந்தனர். மேலும் பி.ஏ.பி கால்வாயில் உள்ள கள்ளிபாளை யம் ஷட்டரில் இருந்து தண்ணீர்  திறக்க வேண்டும் என பாசன விவ சாயிகள் மற்றும் வெள்ளகோவில் பகுதி பொதுமக்கள் தமிழக அர சுக்கு கோரிக்கை விடுத்து பல் வேறு கட்ட கவன ஈர்ப்பு இயக்கங் களை நடத்தி வந்தனர்.

மேலும் பிஏபி பாசன விதிக ளின்படி, பகுதிகளில் உள்ள நிலங் களுக்கு அனைத்து சுற்று தண்ணீர்  வழங்கப்பட்டு, உப்பாறு அணை யும் நிரம்பினால் வட்டமலைக் கரை அணைக்கு தண்ணீர் திறக்க லாம் என அரசாணை உள்ளதாக இப்பகுதி விவசாயிகள் கூறுகின்ற னர். அதன்படி கடந்த நவம்பர் இறுதியில் திருப்பூர் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக பிஏபி பகுதிகளில் போதிய அள வுக்கு மேல் நீர் கிடைத்தது, மேலும்  தொடர் மழையால் உப்பாறு அணையும் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனை‌ தொடர்ந்து வட்டமலைக்கரை ஓடை அணைக்கு தண்ணீர் வழங்க பொதுப்பணி துறை அதிகாரிகள் கடந்த நவம்பர் 28ஆம் தேதி கள்ளி பாளையம் மதகில் இருந்து வினா டிக்கு 300 கன அடி வீதம் நீர் திறந்து விட்டனர். அணைக்கு தண்ணீர் வரும் வழியில் உள்ள இருபத்தி மூன்று தடுப்பணைகள் நிரம்பி, மூன்று நாட்கள் கடந்து டிசம்பர் ஒன்றாம் தேதி மதியம் வட்ட மலைக்கரை ஓடை அணைக்கு தண்ணீர் வந்தடைந்தது. அப் போது விவசாயிகள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப் படுத்தியது குறிப்பிடத்தக்கது. அணை கடந்த 25 ஆண்டுக ளாக வறண்டு கிடந்த நிலையில், அணையில் தற்போது 19.94 அடிக்கு தண்ணீர் கடந்த 80 நாட்க ளாக தேக்கி வைக்கப்பட்டுள்ள தால் அணையை சுற்றியுள்ள காங் கேயம்பாளையம், செட்டிபாளை யம், தாசவநாய்கன் பட்டி,  உத்தம பாளையம், நாகமநாய்க்கன் பட்டி, மயில்ரங்கம் ஆகிய சுற்று வட்டார கிராமங்களில் உள்ள விவ சாய கிணறுகள், ஊராட்சி ஆழ் துளை கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

 இந்நிலையில் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்ததை அடுத்து, கடந்த பிப்ர வரி 6 ஆம் தேதி முதல் பிப்ரவரி 23  ஆம் தேதி வரை இடது மற்றும் வலது புற கால்வாய்களில் 145  மில்லியன் கன அடிக்கு மிகாமல்  மூன்று சுற்றுகளாக இடைவெளி விட்டு 21 நாட்களுக்கு தண்ணீர்  திறக்க தமிழக அரசு உத்தரவிட் டது. இந்த நீர் திறப்பின் மூலம்  முலையாம்பூண்டி, குமாரபாளை யம், அக்கரைபாளையம், நாச்சி பாளையம், மயில்ரங்கம் பகுதிக ளில் உள்ள 6043 ஏக்கர் பாசன நிலங் கள் பயன்பெறும். இதற்காக அணைப்பகுதியில் இடது, வலது  கரை வாய்க்கால்களை சீரமைக் கும் பணியில் நீர் வள ஆதாரத் துறையினர் ஈடுபட்டு வந்த நிலை யில் புதனன்று, வட்ட மலைக்கரை ஓடை தடுப்பணையில், இருந்து பாசனத்துக்காக நீர் திறந்துவிடப் பட்டது. கடந்த 25 ஆண்டுகளாக தண்ணீர் வரத்து இன்றி வறண்டு  கிடந்த வட்ட மலைக்கரை ஓடை அணையில் நீர் இருப்பு உள்ளது.  தற்போது 1997 ஆம் ஆண்டுக்கு பின் பாசனத்துக்கு தண்ணீர் திறக் கப்பட்டுள்ளதால் விவசாயிகள் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி  அடைந்துள்ளனர்.