ஈரோடு, நவ. 12- 3 விழுக்காடு அகவிலைப் படி உயர்வு வழங்காததைக் கண்டித்து சிஐடியு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்கம் தற்செயல் விடுப்பு போராட்டம் அறிவித்துள் ளது. தமிழ்நாடு குடிநீர் வடி கால் வாரிய ஊழியர் மத்திய அமைப்பின் மாநில செயற் குழு கூட்டம் ஈரோட்டில் சனி யன்று நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் அழகுமலை தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் வாரிய ஊழியர் களுக்கு 3 விழுக்காடு அகவிலைப்படி உயர்வு வழங்காததைக் கண்டித்து நவ.15 ஆம் தேதி வாரிய ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானிக் கப்பட்டது. மேலும், ஒப்பந்த ஊழியர்களுக்கு வாரிய அட்டவணைப்படி மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வேண்டும். தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ஊதிய மறுநிர்ணய நிலுவை தொகையை உடனடி யாக வழங்க வேண்டும் போன்ற தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் சிஐடியு மாநில துணைத் தலைவர் எம்.சந்திரன், சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆத்மநாபன், மாநிலப் பொருளாளர் பி.குணசேகரன் மற்றும் மாநிலச் செயலாளரும், ஈரோடு மாவட்ட செயலா ளருமான எஸ்.சி.பிரகாசம் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண் டனர்.