districts

img

வாலிபர் சங்கம் சார்பில் 10 ஆவது ஆண்டாக நீர், மோர் வழங்கல்

திருப்பூர், செப்.3- 10ஆவது ஆண்டாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஆதியூர் கிளை சார்பாக நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. ஊத்துக்குளி வட்டம், குன்னத்தூர் -  ஆதியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம்  திருவிழாயொட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆதியூர் கிளை சனியன்று இரவு தொடங்கி ஞாயிறு மாலை வரை நீர்  மோர் பந்தல் நடத்தப்பட்டது. குண்டம் விழா விற்கு வருகை தரும் பக்தர்களுக்கு 10ஆவது  ஆண்டாக இந்த சேவை நிகழ்வு நடத்தப் பட்டது. இப்பணியில் கிளை உறுப்பினர்கள், கிளை செயலாளர் ரவீந்திரன், முருகேசன், தியாகராஜன், கருணாகரன் மற்றும் நண்பர் கள் தாமு, முத்தமிழ், ஜெயந்த் ஆகியோர் ஈடுபட்டனர்.