பொள்ளாச்சி, பிப்.28- ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ள தால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பொள்ளாச்சியை அடுத்த அமைந் துள்ள ஆழியார் அணையால் 22 ஆயி ரத்து 322 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த அணையில் இருந்து கடந்த ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி முதல் பிப்ரவரி 20 ஆம் தேதி வரை 135 நாட் களுக்கு உரிய இடைவெளிவிட்டு 2 ஆயி ரத்து 573 மில்லியன் கனஅடி நீர் பாசனத்திற் காக திறந்து விடப்பட்டிருந்தது. இந்நிலையில், நீர் திறப்பை நீடிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு ஆழியார் படுகை விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று தற்போது மேலும் 32 நாட்களுக்கு 836 மில்லியன் கனஅடி நீர் திறந்துவிட தமி ழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர். 120 அடி உயரம் கொண்ட ஆழி யாறு அணையில் தற்போது 85 அடி வரை தண்ணீர் உள்ளது. அணைக்கு 476 கனஅடி நீர் வரத்துள்ளது.