திருப்பூர், மார்ச் 17 – மக்கள் விரோத, தேச விரோத, பாசிச பார திய ஜனதா அரசை அகற்றவும், தொழிலா ளர், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் வாழ்வாதார 14 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தியும் ஏப்.5ஆம் தேதி நடைபெறவுள்ள தில்லி பேரணியை விளக்கி பல்லடம் ஒன்றி யத்தில் வியாழனன்று நடைபயண பிரச் சாரம் நடைபெற்றது. விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் வை.பழனிச்சாமி, சிஐடியு துணைச் செயலா ளர் பி.ராமலிங்கம், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் துரைசாமி ஆகியோர் தலைமையில், மாதேஸ்வரன் நக ரில் தொடங்கிய பிரச்சார பயணத்தை விவ சாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.குமார் தொடக்கி வைத்தார். விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் அ. சண்முகம் கோரிக்கைகளை விளக்கிப் பேசி னார். இந்த இயக்கத்தில் சிஐடியு, விவசாயி கள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கத் தைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங் கேற்றனர். கணபதிபாளையம், சென்னிமலைபா ளையம், டி.கே.டி. மில், சின்னக்கரை, லட்சுமி நகர், உப்பிலிபாளையம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்யப்பட்டு அருள்புரத்தில் நிறைவடைந்தது. சிஐடியு மாவட்ட செய லாளர் கே.ரங்கராஜ் நிறைவுரை ஆற்றி னார்.