districts

img

சான்றிதழை தர மறுக்கும் கல்லூரி நிர்வாகம் வாலிபர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

நாமக்கல், ஏப்.20- மாணவர்களின் அசல் சான்றிதழை தர மறுத்த கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து, வாலிபர் சங்கத் தினர் காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டதையடுத்து, ஓரிரு நாட்களில் சான்றி தழை சரிபார்த்து ஒப்படைப்ப தாக தனியார் கல்வி நிறு வனம் பணிந்ததுள்ளது. ராசிபுரம், ஆனந்த கவுண்டர் பாளையதில்  உள்ள டாக்டர். நாகரத்தினம் கல்லூரியில், மாணவர்கள் 2020 -2022 ஆம் ஆண்டு எஸ்சி /  எஸ்டி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் முழு கல்வி கட்டண  விலக்கு அடிப்படையில் சேர்ந்து பயின்று வந்தனர்.  இந்நிலையில், தங்களுடைய கல்வி ஆண்டு நிறைவடைந்து ஈராண்டு  ஆகியும் மாணவர்களின் அசல் சான்றிதழ் தர மறுத்து,  ரூ50 ஆயிரம் பணம் கொடுக்க வேண்டும் என  நிர்பந்தித்துள்ளனர்.  இதனையறிந்த, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். மேலும், மாணவர்களின் அசல்  கல்வி சான்றிதழை தரவில்லை என்றால், தொடர் காத்திருப்பு பேராட்டத்தில் ஈடுபட உள்ளதாக எச்சரித் தனர். இதனையடுத்து, அசல் சான்றிதழ் களை தர மறுக்கும் மேற்கண்ட கல்வி நிறு வனத்தின் மீது கிரிமினல் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு புதனன்று தொடர்  காத்திருப்பு போராட்டத்தில் வாலிபர்  சங்கத்தினர் ஈடுபட்டனர். இப்போராட்டத் திற்கு, வாலிபர் சங்கத்தின் மாவட்ட செய லாளர் எம் மணிகண்டன் தலைமை ஏற்றார்.  சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.டி. கண்ணன், வாலிபர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் எஸ்.கே.சிவச்சந்திரன் ஆகி யோர் கண்டன உரையாற்றினர். இதில் ஏராள மான மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற் றனர். இதனையடுத்து, காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டவர்களிடையே, நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலு வலர்  சுகந்தி பேச்சுவார்த்தையில் ஈடு பட்டார்.  பின்னர், இரண்டு நாட்களுக்குள் மாற்றுச்  சான்றிதழ் அனைவருக்கும் கொடுக்கப் படும் என்று உறுதி அளித்தார். இதனை யடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.  இந்த போராட்டத்தின் காரணமாக நாமக்கல்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.