districts

img

ஊதிய உயர்வு கோரிக்கை - டேன்டீ தொழிலாளர்கள் மறியல்

உதகை, ஜூன் 7- ஊதிய உயர்வை அமல்படுத்தக் கோரி டேன்டீ தொழிலாளர்கள் ஆயி ரக்கணக்கானோர் பந்தலூரில் டேன்  டீ தலைமை அலுவலகத்தை முற்றுகை யிட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டத் தில் உள்ள அரசு தேயிலை தோட்டங் களில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்க ளுக்கு ஊதியமாக நாள் ஒன்றுக்கு 425 ரூபாய் 40 பைசா வழங்கப்படும் என்று  அரசு அறிவித்து அரசாணை வெளி யிட்டது. ஆனால், இதுவரை அந்த ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. இதை கண்டித்து பந்தலூரில் திங்க ளன்று தொழிலாளர்கள் பேரணி  மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டேன்டீ தொழிலாளர்கள் பங் கேற்றனர். இதில் டேன்டீ அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு எல்பிஎப் துணை பொதுச்செயலாளர் மாடசாமி, பிடபிள்யுடிசி பொதுச்செயலாளர் சுப்பிரமணியம், சிஐடியு செயலாளர் ரமேஷ், ஐஎன்டியுசி லோகநாதன், ஏஐடியுசி தலைவர் பெரியசாமி உள் ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள் பங் கேற்று உரையாற்றினர்.  இதேபோன்று டேன்டீ தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட இடங் களிலும் டேன் டீ தொழிலாளர்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங் களில் ஈடுபட்டனர்.