districts

img

சிபிஎம் நாமகிரிப்பேட்டை ஒன்றியச் செயலாளராக வி.பி.சபாபதி தேர்வு

நாமக்கல், நவ.3- மார்க்சிஸ்ட் கட்சியின் நாம கிரிப்பேட்டை ஒன்றியச் செய லாளராக வி.பி.சபாபதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஒன்றிய 7  ஆவது மாநாடு, சித்தி விநாய கர் கோயில் திருமண மண்டபத்தில் ஞாயி றன்று நடைபெற்றது. முன்னதாக, நடை பெற்ற பேரணியை சிபிஎம் மூத்த தலைவ ரும், தொப்பப்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவருமான குப்பண்ணன் துவக்கி வைத் தார். மாவட்டக்குழு உறுப்பினர் செல்வராஜ்  செங்கொடியை ஏற்றி வைத்தார். மாநாட் டிற்கு பி.செல்வராஜ், இ.குப்பண்ணன், எஸ். வசந்தா ஆகியோர் தலைமை வகித்தனர். ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.ரஜினி அஞ் சலி தீர்மானத்தை வாசித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் வி.பி.சபாபதி வரவேற் றார். மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி  துவக்கவுரையாற்றினார். ஒன்றியச் செயலா ளர் கே.சின்னசாமி அறிக்கையை முன்வைத் தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். சுரேஷ் வாழ்த்திப் பேசினார்.  இம்மாநாட்டில், முள்ளுக் குறிச்சியில் அரசு பாலிடெக் னிக் கல்லூரி, மங்களபுரத்தில் அரசு கலை அறிவியல் கல் லூரி, மெட்டாலாவில் அரசு  கூட்டுறவு காய்கறி கொள்முதல்  நிலையம் அமைக்க வேண்டும்.  பழங்குடியின நல வாரியத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும். மரவள்ளிக்கிழங்கிற்கு கட்டுப்படி யான விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.  ஊரக வேலை திட்டத்தை அனைத்து ஊராட்சி களிலும் முழுமையாக அமல்படுத்த வேண் டும். 5 ஆண்டுகளுக்கு மேலாக இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு போராடி வரும் தொப் பப்பட்டி மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, கட்சியின் நாமகிரிப் பேட்டை ஒன்றியச் செயலாளராக வி.பி.சபா பதி மற்றும் 9 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட செயற்குழு  உறுப்பினர் ஏ.டி.கண்ணன் நிறைவுரையாற்றி னார். முடிவில், எஸ்.வசந்தா நன்றி கூறி னார்.