districts

img

தருமபுரியில் விறு விறு வாக்குப்பதிவு

தருமபுரி, பிப்.19- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன் னிட்டு தருமபுரி மாவட்டத்தில் வாக்குப் பதிவு  தொடங்கியது முதல் நீண்ட வரிசையில் காத் திருந்து வாக்காளர்கள் ஆர்வமுடன்  வாக்க ளித்தனர். தருமபுரி நகராட்சி மற்றும் அரூர், பாலக் கோடு, பென்னாகரம், பி.மல்லாபுரம், கடத் தூர், கம்பைநல்லூர், காரிமங்கலம், மாரண் டஅள்ளி, பாப்பி ரெட்டிப்பட்டி, பாப்பாரப் பட்டி ஆகிய 10 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் 159 வார்டு உறுப்பினர் பதவிக ளுக்கு சனியன்று தேர்தல் நடந்தது.  இதை யொட்டி, தருமபுரி மாவட்டத்தில் 37 ஆண்  சாவடிகளும், 37 பெண் வாக்குச் சாவடிக ளும் மற்றும் 154 ஆண்-பெண் உள்ளிட்ட  அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்கும் வாக்குச் சாவடிகளில் என மொத்தம் 228  வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந் தன.  தருமபுரி நகராட்சியில் 33 வார்டுகளுக் கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்க ளித்தனர். முன்னதாக, வாக்களி்க்க வந்த வாக்காளர்களுக்கு தெர்மா ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் சானிடைசர், முகக் கவசம், கையுறை  ஆகியவையும் வழங்கப்பட்டது. தருமபுரி நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மாவட்ட  தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியரு மான ச.திவ்யதர்சினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் மேலும், தருமபுரி மாவட்டத்தில் உள் ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச. கலைச் செல்வன் தலைமையில் 1300 போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட் டத்தில் மாலை 3 மணி நிலவரப்படி தருமபுரி நகராட்சியில் 64.49 விழுக்காடும், 10 பேரூ ராட்சிகளில் 66.14 விழுக்காடு வாக்குபதி வானது, நகராட்சி மற்றும் பேரூராட்சி  உட்பட 65.68 விழுக்காடு வாக்குப் பதிவானது.