districts

img

பட்டியலின குடியிருப்பிற்கு நிரந்தர பாதை கேட்டு விதொச பேரணி

ஈரோடு, பிப். 10- பட்லூர் கிராமம், முத்து கவுண்டன்புதூர் காலனி பட்டியலின மக்கள் குடியிருப்பிற்கு நிரந்தரப்பாதை அமைத்து தரக்கோரி அகில  இந்திய விவசாயத்தொழிலாளர்கள் சங்கத் தின் சார்பில் 100 க்கும் மேற்பட்டோர் பேரணி யாக சென்று கிராம நிர்வாக அலுவலரிடம் மனு அளித்தனர். அந்தியூர் வட்டம், பட்லூர் கிராமத்திற் குட்பட்டது முத்துக்கவுண்டன்புதூர். இங்கு வசிக்கும் பட்டியலின மக்கள் காலம் கால மாக பயன்படுத்தி வந்த பாதையை மறித்த  ஆதிக்க சாதியை சேர்ந்தவர் மீது  நடவடிக்கை  எடுக்க வேண்டும். முன்னோர்கள் வழிபாடு  நடத்தும் மாலா கோயிலை சேதப்படுத்திய வர் மீது வன்கொடுமை சட்டத்தில் நடவ டிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு அக்.28 ஆம் தேதி, வட்டாட்சியர் முன்பு போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி பொது பாதை  கிடைக்கும் வரை தற்காலிகமாக சென்று வர  பாதை ஏற்படுத்திய உடன்பாட்டை மீறி, பாதையை அடைத்து சட்டம் ஒழுங்கை மீறிய வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங் கம் சார்பில் பட்லூர் நால்ரோடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய  விவசாயத் தொழிலாளர்கள் சங்க கிளைத் தலைவர் சி.மாதப்பன் தலைமை வகித்தார்.  விதொச மாவட்டத் தலைவர் ஆர்.விஜயரா கவன், மாவட்ட பொருளாளர் எஸ்.மாணிக் கம், தாலுகா செயலாளர் ஏ.கே.பழனிச்சாமி,  பொருளாளர் பி.கண்ணன் ஆகியோர் கண் டன உரையாற்றினர். தீண்டாமை ஒழிப்பு முன் னணி மாவட்டத் தலைவர் பி.பி.பழனி சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத்  தலைவர் எஸ்.வி.மாரிமுத்து, மாற்றுத்திறனா ளிகள் சங்க மாவட்டத் தலைவர் டி.சாவித்திரி மற்றும் சிபிஎம் தாலுகா செயலாளர் ஆர்.முருகேசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஊர்வலமாக சென்று கிராம நிர்வாக அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. இதில், 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில்  எம்.சுந்திரராஜன் நன்றி கூறினார்.