ஈரோடு, பிப். 1- பெருந்துறை சிப்காட் வளாகத்தில் சட்ட விரோதமாக ஆலை கழிவுகளை மண்ணில் புதைத்த விவகாரத்தில் விசாரணை முடி வில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்ப டும் என அமைச்சர் முத்துசாமி எச்சரித்துள் ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழ கத்தின் ஈரோடு மண்டலம் சார்பாக 35 ஆவது தேசிய சாலை மற்றும் பாதுகாப்பு மாத விழா தொடங்கியது. இதில் தமிழக வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை அமைச்சர் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேர ணியை கொடி அசைத்து தொடங்கி வைத் தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், சாலை பாதுகாப்பில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும், இருசக்கர வாக னங்களில் கூடுதல் நபர்கள் பயணிப்பதை தவிர்ப்பதோடு, நான்கு சக்கர வாகனங்க ளில் அதிக பாரம் ஏற்றி செல்வதை தவிர்த்து பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும். பெருந்துறை சிப்காட் வளாகத் தில் ஆலையிலிருந்து வெளியேற்றப் பட்ட கழிவுகளை சட்டவிரோதமாக மண்ணில் புதைத்த நிறுவனத்தின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என் றார். மேலும் போக்குவரத்து கழக ஓட்டுனர் களுக்கு கூடுதல் பணி சுமை வழங்கிய விவகா ரத்தில் விதிமுறை மீறி பணி வழங்கியிருந் தால் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.