தடையை மீறி போராட்டம்: கைது
திருப்பூர், ஜன.11- கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல் படும் தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை கண் டித்து காங்கேயத்தில் தடையை மீறி போராட் டத்தில் ஈடுபட்ட சிஐடியுவினர் கைது செய்யப் பட்டனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருகி றார். இந்நிலையில் தமிழக சட்டமன்றத்தில், அரசு தயாரித்த உரையை திரித்து வாசித்து குழப்பம் விளைவித்தார். அரசியல் அமைப் புச் சட்டப்படி செயல்பட வேண்டிய ஆளுநர், தமிழ்நாட்டிற்கு எதிராகவும், கூட்டாட்சி தத்து வத்திற்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருவதால் அவர் தமிழ்நாட்டை விட்டு வெளி யேற வேண்டும் என்று வலியுறுத்தி காங்கே யம் அரசு பேருந்து பணிமனை முன்பாக ஆர்ப் பாட்டம் நடத்த சி.ஐ.டி.யு. சங்கத்தினர் முடிவு செய்தனர். இப்போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது.எனினும் திட்டமிட்டபடி புதன்கிழமை அதிகாலை அரசு பேருந்து பணி மனை முன்பாக, காவல்துறை தடையை மீறி சிஐடியு சங்கத்தினர் ஆளுநர் ரவியை கண் டித்து முழக்கம் எழுப்பி,ஆர்ப்பாட்டம் நடத்தி னர். சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க காங்கேயம் கிளை செயலாளர் அசோக் குமார், சிஐடியு திருப்பூர் மாவட்ட குழு உறுப் பினர்கள் கே.திருவேங்கடசாமி,காளிராஜ் உள்ளிட்ட ஏழு பேர் பங்கேற்றனர். அப்போது அங்கு வந்த காங்கேயம் காவல் நிலைய ஆய்வாளர் காமராஜ் தலை மையிலான போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டவர்களை கைது செய்து காவல் நிலை யத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
உருவ பொம்மை எரிக்க முயற்சி: கைது
தாராபுரம், ஜன.11- தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து உருவ பொம்மை எரிக்க முயன்ற விடுதலை சிறுத்தை கட்சியினர் 8 பேரும், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆதித்தமிழர் பேரவையினர் 7 பேரும் கைது செய்யப்பட் டனர். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அரசிய லமைப்பு சட்டத்திற்கு மாறாகவும், சட்டமன் றத்தில் தேசியகீதத்தை அவமதிப்பு செய்த தோடு ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காததை கண்டித்தும் திருப்பூர் கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் நா.தமிழ்முத்து தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப் பாட்டத்தில் தமிழ்நாடு ஆளுநர் தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களுக்கு விரோதமான நடவ டிக்கையில் ஈடுபட்டு வருவதை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட் டத்தில் தாராபுரம் நகரச்செயலாளர் செந்தில் குமார், மாவட்ட துணை செயலாளர் ஆற்ற லரசு, ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், தி.க அழகப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். ஆர்ப்பாட்ட முடிவில் ஆளுநரின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற விடுதலை சிறுத்தை கட்சியினர் 8 பேரை போலீசார் கைது செய்தனர். ஆதித்தமிழர் பேரவை திருப்பூர் கிழக்கு மாவட்டம் சார்பில் தமிழ்நாடு ஆளுநரை கண் டித்து மாவட்ட செயலாளர் பொன்.ப. ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தடையை மீறி ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டதாக 7 பேர் கைது செய்யப்பட் டனர்.