ஈரோடு, ஏப்.23- வில்லாபுரம் தியாகி லீலாவதி நினைவுநாளான ஞாயிறன்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாதர் சங் கம் சார்பில் அனுசரிக்கப்பட்டது. மதுரை மாநகர மக்களின் அடிப் படை பிரச்சனைகளை தீர்க்க போரா டியதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாமன்ற உறுப்பின ராக செயல்பட்ட தோழர் லீலாவதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது நினைவுநாளான ஞாயி றன்று மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. ஈரோடு அரசு மருத்துவமனையில் சிபிஎம் நகர செயலாளர் பி.சுந்தர ராஜன் தலைமையில் இம்முகாம் நடை பெற்றது. மருத்துவமனை கண்கா ணிப்பாளர் ரேவதி முகாமை தொடங்கி வைத்தார். இதில் சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், செயற் குழு உறுப்பினர் ஆர்.கோமதி உட்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் 51 யூனிட் ரத்ததானம் செய்யப்பட் டது. நிறைவாக எஸ்.ஸ்டாலின் நன்றி கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஈரோடு மாவட்டக்குழு அலுவ லகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். விஜயராகவன் தலைமை ஏற்றார். விவ சாய தொழிலாளர்கள் சங்க அகில இந்திய துணைத்தலைவர் ஏ.லாசர், மாநிலப் பொருளாளர் அ.பழனிசாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செய லாளர் ஆர்.ரகுராமன் ஆகியோர் தியாகி லீலாவதியின் நினைவுகள் குறித்து உரையாற்றினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.கோமதி, மாவட்டகுழு உறுப்பினர்கள் உட்பட பலர் தோழர் லீலாவதி உருவப்படத் திற்கு, மலர்தூவி அஞ்சலி செலுத்தி னர். தருமபுரி இதேபோல் தோழர் லீலாவதியின் நினைவுதினத்தை முன்னிட்டு தரும புரி, செங்கொடிபுரத்தில் அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் மாதர் சங்க முன்னாள் மாவட்ட செய லாளர் எஸ்.கிரைஸாமேரி, மாவட்ட துணைத்தலைவர் கே.பூபதி, நகர தலைவர் சுபா, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் எம்.மாரி முத்து, வாலிபர் சங்க ஒன்றிய தலை வர் பெரியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.