திருப்பூர், ஏப். 24 - அவிநாசி ஒன்றியம் சேவூர் அருகே டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கடை அமைக்கும் முயற்சியை கைவி டாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடு போவதாகவும் எச்சரிக்கை விடுத்த னர். திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றி யம் சேவூர் அருகே பந்தம்பாளையம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த பெரும்பாலானோர் விவசாய தொழி லில் ஈடுபட்டு வருவதாகவும், விவசாயத் தொழிலை நம்பி உழவர் உற்பத்தியா ளர் குழு ஆரம்பித்து மகளிர் சார்பில் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்த னர். அங்கீகாரம் பெற்ற குடியிருப்புப் பகுதிகளிலும் மக்கள் வசித்து வருகின் றனர். இப்பகுதி மக்களுக்கு அச்சுறுத் தலை ஏற்படுத்தும் வகையில் டாஸ்மாக் மதுபானக் கடை மற்றும் மனமகிழ் மன் றம் அமைப்பதற்கான நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது என இவர்கள் குற்றம்சாட்டினர். குடியிருப்புப் பகுதிகளுக்கு 50 அடிக்குள்ளாக, கருவலூர் சேவூர் சாலையில் இந்த கடை அமைந்தால் பெண்கள், குழந்தைகள் இப்பாதையில் பாதுகாப்பாகச் செல்ல முடியாது. இந்த கிராமத்தைச் சுற்றி ஐந்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் இயங்கி வரு கின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வரும் நிலையில் டாஸ்மாக் மதுக்கடை மற்றும் மனமகிழ் மன்றம் அமைந்தால் இப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்ப டும். அதேபோல் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்களும் நிகழ வாய்ப்புள்ளது. ஓய்வு பெற்ற அரசு பள் ளித் தலைமை ஆசிரியரின் இடத்தில் இந்த டாஸ்மாக் மதுக்கடை மற்றும் மன மகிழ் மன்றம் அமைய இருப்பதாக தெரி யவருகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கக் கூடாது என்று அவர் கள் திங்களன்று மாவட்ட ஆட்சியர கத்தில் முறையிட்டனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறு கையில், பொது மக்கள் எதிர்ப்பை மீறி அங்கு மதுபானக் கடை நடத்த அனுமதி கொடுத்தால், கிராமப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்தனர்.