districts

img

திருப்பூர் மாவட்டத்தில் எழுச்சியுடன் கடைப்பிடிப்பு

திருப்பூர், டிச. 25 - வெண்மணி தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு ஞாயிறன்று திருப்பூர் மாவட்டத்தில் எழுச்சியுடன் தியாகிகள் நினைவு தினம் அனுசரிக் ப்பட்டது.  டிசம்பர் 25 கீழ்வெண்மணி தியாகி கள் 54 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஊத்துக் குளி  தாலுகாவில் 9 மையங்களில் கொடியேற்று நிகழ்ச்சியும், ஊத்துக் குளி ஆர்.எஸ். தாலுகா கமிட்டி அலுவ லகம் முன்பு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. புதுப்பாளையம், சாலப் பாளையம், அம்பேத்கர் நகர், கரைப் பாளையம், மேட்டுக்கடை, நடுப்பட்டி,  ஒத்தப்பனைமேடு, வட்டாலபதி, அணைப்பாளையம் ஆகிய ஊர் களில் கொடியேற்ற நிகழ்ச்சி நடை பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங் கத்தின் தாலுகா தலைவர் ஆர்.மணியன் தலைமை தாங்கினார்.  தாலுகா செய லாளர் க.பிரகாஷ், துணைத் தலைவர்  கே.எஸ்.ராமசாமி, பொருளாளர் பழனிச்சாமி, துணைச் செயலாளர் ஆர். கருப்புசாமி மற்றும் கமிட்டி உறுப்பி னர்கள் கே.எஸ்.கருப்புசாமி, மு. பழனிசாமி, செ.நாகராஜ், ஆறுமுகம், வேலுச்சாமி, நந்தகுமார், மூர்த்தி, செல்வன், மூர்த்தி, குமாரசாமி, செந்தில் உள்ளிட்டோர் பங்கேற் றனர். இந்த நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா  செயலாளர் எஸ்.கே.கொளந்தசாமி, குன்னத்தூர் கிளை செயலாளர் பா. சின்னச்சாமி, சிஐடியு வி.கே.பழனிச் சாமி, மின் ஊழியர் மத்திய அமைப்பு நிர்வாகிகள் ஏ.சக்திவேல், ப.மார்க்ஸ், மூத்த தோழர் வி.ஏ.நடராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். அனைத்து ஊர்களிலும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்

திருப்பூர்

கட்சியின் மாவட்ட குழு அலுவலகம்  முன்பாக அலங்கரித்து வைக்கப்பட் டிருந்த வெண்மணி தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சிக்கு  கட்சியின் மாவட்ட அலுவலக கிளை செயலாளர் பா.சௌந்தர பாண்டியன் தலைமை வகித்தார். செங்கொடியை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ் ஏற்றி வைத்தார். கட்சியின்  மாவட்ட செயலாளர் செ.முத்துக் கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப் பினர் எம்.ராஜகோபால், வடக்கு  மாநகர குழு உறுப்பினர் பா.சௌந்தர ராசன் உள்ளிட்டோர் வெண்மணி தியாகிகளை நினைவு கூர்ந்து உரை யாற்றினார். இதில்,  மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஜி.சாவித்திரி, ச.நந்தகோபால், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஆர். மைதிலி, வை. ஆனந்தன், பி.செல்ல துரை உள்பட நகர, ஒன்றிய குழு  உறுப்பினர்கள், கிளைச் செயலா ளர்கள் உள்ளிட்ட கட்சி அணியினர் கலந்து கொண்டனர். வெண்மணி 54ஆம் ஆண்டு நினைவு  தின அஞ்சலி நிகழ்ச்சி திருப்பூர் தெற்கு  மாநகரில் காட்டுவளவு பகுதியில் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் மாவட்ட  செயற்குழு உறுப்பினர் கே.உன்னி கிருஷ்ணன், மாநகரச் செயலாளர் டி. ஜெயபால் உள்பட தொழிலாளர் கலந்து  கொண்டனர்.

உடுமலைப்பேட்டை 

உடுமலை நகரில் வெண்மணி தியாகிகள் நினைவு தின கொடி யேற்று நிகழ்சி கட்சி அலுவலகமான தோழர் ஸ்டாலின் நிலையம் முன்பாக  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் நகரச் செய லாளர் கே.தண்டபாணி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப் பினர் எஸ். ஆர்.மதுசூதனன் செங் கொடி ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.  மேலும், கட்சி அங்கத்தினர் வி. விசுவநாதன், சுகுணா எஸ்.கருப்பு சாமி, வசந்தி,  பஞ்சலிங்கம், மூத்த  தோழர் கருமலையப்பன், பாலு  உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதுபோல் மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெண் மணி தியாகிகள் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.