districts

img

மலைவாழ் மக்களுக்கு பட்டா மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்திற்கு வெற்றி

சேலம், ஜூன் 15- சேலம் அருகே மலைவாழ் மக்களுக்கு  வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இரண்டு ஆண்டுகளாக தொடர் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதன் விளைவாக, தற்போது வீட்டு மனைப் பட்டா கிடைத்துள்ளது.  சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, கீழ்  தொம்பை கிராமத்தைச் சேர்ந்த 19 குடும்பத் திற்கு வீட்டுமனைப் பட்டா கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். இதையறிந்த மார்க் சிஸ்ட் கட்சியினர் கடந்த இரண்டு ஆண்டு களாக தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து, ஆத்தூர் வட்டாட்சியர்  மாணிக்கம்,  கீழ் தொம்பை கிராமத்திற்கு நேரில் சென்று 19 குடும்பத்திற்கும் வீட்டு மனைப் பட்டாவை வழங்கினார். இதனால், அப்பகுதியைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஆத்தூர் தாலுகா செயலாளர் ஏ.முருகேசன், கிளை செயலாளர் முருகேசன். கட்சி முன்னணி ஊழியர்களான ராமசாமி மாணிக்கம், சாந்தா, இளையராஜா, வைரம்மாள், ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.