சேலம், நவ.11- பெண்கள் பாதுகாப்பு மற் றும் பெண்களுக்கான அதி காரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக் கிள் பயணத்தை பெண் ஒரு வர் மேற்கொண்டுள்ளார். உத்தரபிரதேசத்தை சேர்ந்த இவர் காஷ்மீர் முதல் கன்னி யாகுமரி வரை சைக்கிள் பய ணம் 45 நாள் பயணித்து சேலம் வந்தடைந்தார். உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியை சேர்ந்த சீமா அகர் வால் என்ற ஆயுர்வேத மருத்துவர் பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கான அதிகாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த செப்.27 ஆம் தேதி காஷ்மீரில் தொடங்கிய சைக்கிள் பயணம் தனி யொரு பெண்ணாக பல்வேறு மாநிலங்களைக் கடந்து 45 நாட்கள் பயணம் செய்து, வெள்ளியன்று சேலம் வந்தடைந் தார். மேலும், அவர் சேலத்திலிருந்து கன்னியாகுமரி சென்று அவருடைய பயணத்தை நிறைவு செய்ய 6 முதல் 7 நாட்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சேலம் வந்த அவ ருக்கு அகர்வால் சபா சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது.