சர்வதேச அளவில் தனி மனித உரிமைகளை உறுதி செய் வதற்காகவும் அவற்றை பாது காப்பதற்காகவும் 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள் ஐ.நா பொதுச் சபையால் மனித உரிமைகள் தொடர்பான உலக ளாவிய பேரறிக்கை (யூடிஎச்ஆர் -யூனிவர்சல் டிக்ள ரேஷன் ஆப் ஹியூமன் ரைட்ஸ்) பிரகடனம் செய்யப் பட்டது. இந்த பிரகடனம் வெளியாகி இன்றோடு 75 ஆண்டு களை நிறைவடைகின்றன. இந்தப் பிரகடனம் கடந்த 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள் பாரிஸ் நகரில் ஐநா பொதுச் சபையால் பிர கடனப்படுத்தப்பட்டது. பிறப்பு, இனம், நிறம், மதம், பாலி னம், மொழி, அரசியல், சொத்து, அல்லது பிற தகுதிகள் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் ஒவ்வொரு மனித ருக்குமான தனிப்பட்ட உரிமைகளை இந்த பிரகடனம் உறுதி செய்கிறது. இந்தப் பிரகடனம் (யூடிஎச்ஆர்) உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட ஆவ ணமாகும். இதுவரை 500க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த ஆவணம் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான பிரச் சனைகளுக்கு தீர்வு காணுதல், மனித உரிமைகளை மேம் படுத்துதல் ஆகியவை பற்றி மக்கள் மத்தியில் விழிப்பு ணர்வு ஏற்படுத்துவதற்காக கடந்த 1950 ஆம் ஆண்டு ஐநா சபை டிசம்பர் 10 ஆம் தேதியை மனித உரிமைகள் தின மாக அறிவித்து அனுசரிக்கப்படுகிறது. கடந்த 1993 ஆம் ஆண்டு இந்தியாவில் மனித உரிமைகள் பாதுகாப் பிற்கான சட்டம் இயற்றப்பட்டது. அதே ஆண்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்டது. மேலும் இந்தச் சட்டம் மாநில அரசுகள் மாநில மனித உரிமை கள் ஆணையம் அமைத்துக் கொள்ள வழிவகை செய் தது. மனித உரிமைகளை பாதுகாக்கும் முயற்சியில் ஐநா சபையும், சமூக ஆர்வலர்களும், தொண்டு நிறுவனங்க ளும் தொடர்ந்து போராடி வருகின்றனர். இருப்பினும் போர் மற்றும் பேரிடர் காலங்களில் மனித உரிமை அத்துமீறல் கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. தற்போ தைய இஸ்ரேல் - பாலஸ்தீனப் போரை இதற்குச் சான்றாகக் கூறலாம். இருதரப்பிலும் பெரும் உயிர் சேதங்கள் ஏற் பட்டுள்ளன. குறிப்பாக பாலஸ்தீனத்தில் பெண்களும் குழந்தைகளும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மனித உரிமைகள் கேள்விக்குறியாகியுள்ளது. இந் திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 19(1)(a) குடிமக்க ளுக்கான பேச்சுரிமையை உறுதி செய்கிறது. ஆனால் சமீப காலமாக, அரசின் நடவடிக்கைகள் குறித்து கருத்து கூறு பவர்கள் மீதும் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக போராடுபவர்கள் மீதும் கைது நடவடிக்கைகள் பாய்ந்து வருகிறது. இத்தகைய நடைமுறைகள் பேச்சுரிமைக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. மேலும் நாடு முழுவதும் மதரீதியான மோதல்களும் சாதி ரீதியான தீண்டாமைக் கொடுமைகளும் பெண்கள் மீதான வன்முறை களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகி றது. இத்தகைய சூழலில் தனிமனித உரிமைகளை பாது காத்து அவற்றிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஆதிக்க சக்தி களுக்கு எதிராக போராடுவது நம் ஒவ்வொருவரின் கடமை யாகும். இந்த ஆண்டு “சுதந்திரம், சமத்துவம், அனைவருக் கும் நீதி” என்ற கருத்தை மையமாகக் கொண்டு மனித உரிமைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. எனவே தனிமனித சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் அனைவருக்குமான நீதியையும் உறுதி செய்ய பாடுபடுவோம் என இந் நாளில் உறுதி ஏற்போம். -செ.முத்திவீரணன்