districts

கோடை சீசனுக்காக தயாராகி வரும் உதகை தாவரவியல் பூங்கா

உதகை, நவ.28- கோடை சீசனுக்காக உதகை தாவரவியல் பூங்காவில் 5 லட்சம் மலர் நாற்றுகள் உற்பத்தியில் தோட் டக்கலைத்துறையினர் தீவிரமாக ஈடு பட்டுள்ளனர். ஆண்டுதோறும் கோடை கால மான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சமவெளிப்பகுதிகளில் நிலவும் வெயிலை தாங்க முடியாமல் குளு மையை அனுபவிக்க ஏராளமான சுற் றுலாப் பயணிகள் உதகைக்கு படை யெடுப்பது வழக்கமாகும். இச்சம யங்களில், அதிகளவு சுற்றுலாப் பய ணிகள் வரும் நிலையில், அவர்களை மகிழ்விக்கும் வகையில், உதகை தாவரவியல் பூங்காவில் மலர் கண் காட்சி, ரோஜா பூங்காவில் ரோஜா  கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்கா வில் பழக்கண்காட்சி, கோத்தகிரி யில் காய்கறி கண்காட்சி, கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி ஆகி யவை நடத்தப்படுகிறது. இதனை காண, ஏராளமான சுற்றுலாப் பயணி கள் வருகின்றனர். இவர்களின் கண்க ளுக்கு விருந்தளிக்கும் வகையில் தோட்டக்கலைத்துறை அனைத்து பூங்காக்களில் பல வகையான மலர் கள் பூக்கும் வகையில் பல லட்சம் மலர் செடிகளை முன்னதாகவே நடவு செய்து, அதில் மலர்கள் பூத்துக் காணப்படும். மேலும், தமிழகம் மாளிகை பூங்கா, குன்னூர் காட்டேரி பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா உட் பட அனைத்து பூங்காக்களிலும் புதி தாக, அதே சமயம் பல வகையான மலர் நாற்றுகள் நடவு செய்வது வழக் கம். இதற்காக ஆண்டு தோறும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்க ளில் நாற்று உற்பத்தி செய்யப்படும். நாற்றுகள் உற்பத்தியானவுடன் டிசம் பர் மாதம் இறுதி வாரத்தில் நடவு பணிகள் துவங்கும். மேலும், உதகை தாவரவியல் பூங்காவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மலர் நாற்றுக் கள் நடவு செய்யப்பட்டு, இந்த நாற்று கள் தயாரானாவுடன் பூங்காவில் உள்ள அனைத்து பாத்திகளிலும் நடவு செய்யப்படும். மேலும், 35  ஆயிரம் தொட்டிகளில் மலர் நாற்று கள் நடவு செய்யப்படும். இதுதவிர பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காகவும் நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்படும். பின், இந்த மலர் செடிகள் பூக்கும் காலத்திற்கு ஏற்றவாறு டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை பூங்கா முழுவதி லும் நடவு பணிகள் மேற்கொள்ளப் படும். இதற்காக, தற்போது நாற்று  உற்பத்தியில் தோட்டக்கலைத்துறை யினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். உதகையிலுள்ள தாவரவியல் பூங்கா வில் நடவு செய்வதற்காக தற்போது பூங்கா நர்சரிகளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர் நாற்றுக்கள் உற்பத்தி செய்யும் பணிகள் துவங்கி நடந்து வருகிறது. கடந்த மாதம் விதைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தற்போது பல்வேறு வகை யான நாற்றுகள் உற்பத்தி செய்யப் பட்டு வருகிறது. இவைகள் நன்று வளர்ந்தவுடன், அவைகள் வளரும் காலத்திற்கு ஏற்றவாறு டிசம்பர் மாதம் இறுதி முதல் நடவு பணிகள் துவக்கப்படவுள்ளது.