districts

img

தத்தனூர் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க எதிர்ப்பு

திருப்பூர், மார்ச் 7- அவிநாசி வட்டம் தத்தனூரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு இனிமேல் இங்கு தொழிற்பேட்டை அமைக்கப் படாது என்று அரசாணை வெளி யிட வற்புறுத்தி உள்ளனர். அவிநாசி வட்டம், தத்தனூர் சிப் காட் தொழிற்பேட்டை எதிர்ப்பு விவ சாயிகள் மற்றும் பொதுமக்கள் திங்களன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தி ருந்தனர். அவர்கள் மாவட்ட ஆட்சி யரிடம் அளித்த மனுவில் கூறியிருப் பதாவது: அவிநாசி வட்டம் தத்தனூர் ஊராட்சி, புஞ்சை தாமரைக்குளம் ஊராட்சி, புலிப்பார் ஊராட்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிக ளில் 10 ஆயிரம் குடும்பங்களுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இந்த வட்டாரத்தில் விவசாயம் மற் றும் விவசாயம் சார்ந்த கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி உள்ளிட்ட தொழில்களை நம்பியும், விவசாய கூலி வேலைகளை நம்பியும், அனைத்து பகுதி மக்களும் வாழ்ந்து வருகின்றனர். ஏற்கனவே, பெருந்துறை சிப் காட் அமைந்த நிலையில் சுற்று வட்டார கிராமங்களில் நிலத்தடி நீர் மாசுபட்டும், அப்பகுதி மக்களுக்கு புற்றுநோய், தோல் நோய் உள்ளிட்ட கொடிய நோய் தாக்குதல் ஏற்பட்டு பெரும் துயரத்தை அனுபவித்து வருவதை நாங்கள் அங்கு உள்ள உறவினர்கள் மூலமும் ஊடகங் கள் மூலமும் நன்றாக அறிந்துள் ளோம். இந்நிலையில், தத்தனூரில் சிப் காட் தொழிற்பேட்டை அமைக்கப் பட்டால் எங்கள் விவசாய நிலத்தை இழந்து அகதிகளாக வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். அத் துடன் இப்பகுதியில் நிலம், நீர், காற்று மாசுபட்டு மக்கள் வாழ தகுதி இல்லாத நிலை உருவாகும். மக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் தாக்குதல் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, தத்தனூர் சிப்காட் தொழில் பூங்காவை எதிர்த்து இந்த வட்டார மக்கள் தொடர் போராட்டங் களை நடத்தினோம். இதன் பலனாக இங்கு தொழிற்பேட்டை அமைக்கப் படாது என்று அரசு தரப்பில் அறி விக்கப்பட்டது. இதை ஏற்று போராட் டம் கைவிடப்பட்டது.

எனினும் அரசு இது குறித்து அரசாணை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகி றோம். இப்பகுதியில், நிலத்தடி நீர் செறிவூட்டும், அவிநாசி அத்திக்க டவு திட்டம் விரைந்து முடிக்கப் பட்டு ஓரிரு மாதங்களில் விவசாயி கள் பயன்பெற உள்ளனர். இந் நிலையில் தொழில் பூங்கா வராது என அரசாணை வெளியிடப்படும் என்று எதிர்பார்த்து இருந்த நிலை யில், கடந்த பிப்ரவரி 28, மார்ச் 1 ஆகிய தேதிகளில் இங்கு ஜி.ஐ.எஸ். வரை படம் தயாரிப் பதற்கு ஆர் எஸ் ஐ சாப்ட் டெக் இந்தியா நிறுவனத்தில் இருந்து அதிகாரிகள் வந்திருந்தனர். அவர் கள் ஏற்கனவே ஆய்வு செய்து இருந்த 850 ஏக்கர் என்பதற்கு மாறாக 1500 ஏக்கர் நிலப் பரப்பில் ஆய்வு செய்து உள்ளனர். இத னால் இப்பகுதி மக்கள் அச்சமடைந் துள்ளனர். இவர்கள் புதிதாக ஆய்வு செய்த பகுதியில் அவிநாசி அத்திக் கடவு திட்டம் ஐந்தாவது நீரேற்று நிலையம் கட்டி முடிக்கப்படும் தருவாயில் உள்ளது. இதனால் அவிநாசி அத்திக்கடவு திட்டம் சிப் காட் தொழிற்பேட்டைக்காக கொண்டு வரப்பட்டதா என்ற சந் தேகம் கிராம மக்களிடம் ஏற்பட்டுள் ளது. இது அவிநாசி வட்டாட்சியர், சிப்காட் திட்ட இயக்குனர் ஆகி யோரை தொடர்பு கொண்டபோது அதிகாரிகள் வருவது பற்றி தங்க ளுக்குத் தெரியாது என்று கூறி விட்டனர். இனிவரும் காலங்களில் இங்கு சிப்காட் அமைந்தால் பொது மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே, இங்கு சிப்காட் தொழில் பூங்கா அமையாது என்று அரசாங்கம் அர சாணை வெளியிட வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.