districts

img

அரசு மருத்துவமனை சுகாதார சீர்கேட்டை சரி செய்ய வலியுறுத்தல்

திருப்பூர், மே 23– திருப்பூர் அரசு மருத்துவமனை சுகாதார சீர்கேட்டை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருப்பூர் தெற்கு மாநகர 12 ஆவது மாநாடு வலியுறுத்தி உள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருப்பூர் தெற்கு மாநகர 12 ஆவது மாநாடு ஞாயிறன்று ஆலாங்காடு மைதிலி சிவராமன் நினைவரங்கில் நடைபெற்றது. மாநாட் டுக் கொடியை எஸ்.விஜயா ஏற்றி வைக்க, தெற்கு மாநகரத் தலைவர் டி.மினி தலைமை ஏற்றார். டி.ராசாத்தி வரவேற்றார். மாநாட்டைத் தொடக்கி வைத்து மாவட்டப் பொருளாளர் ஏ. ஷகிலா பேசினார். மாநகரச் செயலாளர் எஸ்.பானுமதி மாந கரப் பொருளாளர் எஸ்.விஜயா ஆகியோர் அறிக்கையை முன்வைத்தனர். மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவர் டி.ஜெய பால், சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலா ளர் பி.பாலன், மாதர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் பா.லட்சுமி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் பா.ஞானசே கரன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர். திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் வருகின்றனர். மருத்துவக் கல்லூ ரியாக மாறிய பிறகும், போதுமான அளவுக்கு மருத்துவர் கள், செவிலியர், படுக்கை வசதி, குடிநீர் வசதி ஆகியவை விரிவுபடுத்தப்படாமல் உள்ளது. இதனால் அங்கு வரும் மக்கள் அலைக்கழிக்கப்படும் நிலை தொடர்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை சுகாதார சீர்கேட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.நியாயவிலைக் கடைகளில் அனைத்துப் பொருட் களும் முழுமையாக விநியோகம் செய்ய வேண்டும், குடியி ருப்புகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு திருப்பூர் தெற்கு மாநகர தலைவராக டி.மினி, துணைத் தலைவராக ஜெ.கேத்தரின், ஷகிலா, செயலாளராக எஸ்.பானுமதி, துணைச்செயலாளராக சுமதி, பாக்கியலட்சுமி, பொருளாளராக பி.விஜயா உட்பட 16 பேர் கொண்ட மாநகர கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டின் முடிவில் சங்கத் தின் மாவட்டத் தலைவர் ஆர்.மைதிலி மாநாட்டை நிறைவு செய்து வைத்துப் பேசினார். என்.சங்கீதா நன்றி கூறி னார்.