districts

img

விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டுயானைகள்

மேட்டுப்பாளையம், பிப்.3- விளை நிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டுயானைகளால் மேற்கு தொடர்ச்சி  மலையடிவார பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம், பெரிய நாயக்கன்பாளையம், சிறுமுகை மற்றும் காரமடை பகுதிகளில் ஆண்டு முழுவதும்  யானைகளின் நடமாட்டம் காணப்பட்டாலும் கடந்த சில மாதங்களாக இப்பகுதிகளில் உள்ள வனங்களை விட்டு வெளியேறி  ஊருக்குள் யானைகள் நுழையும் நிகழ்வு கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வனத் துறையினரின் புள்ளி விபரப்படி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இப்பகுதிகளில் 162 முறை யானைகளின் ஊடுருவல் நடைபெற்றுள் ளது. ஒவ்வொரு முறை யானைகளின் நுழை வின் போதும் விவசாயிகள் தங்களது உழைப்பையும், முதலீட்டையும் கொட்டி வளர்த்த தென்னை, வாழை, கரும்பு, சோளம், காய்கறிகள் என அனைத்தையும் யானைகள் சேதப்படுத்துகின்றன. நூற்றுக் காணக்கான தென்னைகள், ஆயிரக்கணக் கான வாழைகள் சாய்க்கப்பட்டும், பல ஏக்கர் பரப்பளவிலான கரும்பு, சோளம் உள் ளிட்ட பயிர்கள் சேதமானதால் இப்பகுதி யில் உள்ள பெரும்பாலான விளை நிலங்கள் சூறையாடப்பட்டே காணப்படு கின்றன. யானைகள் காட்டை விட்டு வெளியேறு வதை தடுக்க வெட்டப்பட்ட யானை தடுப்பு அகழிகள், இவை தோட்டங்களுக்குள் புகா மல் இருக்க அமைக்கப்பட்ட சோலார் மின் வேலிகள் என அனைத்து பாதுகாப்பு நடவ டிக்கைகளும் தோல்வியிலேயே முடிந்துள் ளது.

இரவு - பகல் என எந்த நேரத்திலும் யானைகள் வரலாம் என்ற நிலையே தொடர்கிறது. வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறாமல் தடுக்க வேண்டிய வனத்துறை அவை ஊருக்குள் நுழைந்து பல மணி நேரங்களுக்கு பின்னர் சம்பவ இடத்திற்கு வந்தடைந்து அவற்றை விரட் டும் பணியில் ஈடுபடுவதால் எந்த பயனும் இல்லை என விவசாயிகள் ஆதங்கம் தெரி வித்துள்ளனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளி டம் கேட்ட போது, “தற்போது யானைகளின் வலசை காலம் என்பதால் அவை இடம் மாறும் போது வழிமாறும் யானைக்கூட்டங் களால் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இவற்றை சமாளிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு யானைகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஊருக்குள் யானைகள் நுழைவதை கண்டால் உடனடி யாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், எந்த காரணத்தை கொண்டும் விவசாயிகளோ பொது மக்களோ அவற்றை விரட்ட முயல கூடாது. வன உயிரினங் களால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு விரை வாக இழப்பீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றனர்.  மேலும், யானைகளால் ஏற்பட்டு வரும் பயிர் மற்றும் உயிர் சேதங்களை தடுக்க பல  ஆண்டுகளாக நீடித்து வரும் இப்பிரச்ச னைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். இவற்றால் ஏற்படும் இழப்புகளை உடனுக் குடன் ஈடு செய்து விவசாயத்தை தொடர வழி வகை செய்ய வேண்டும் அப்பகுதி விவ சாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.