districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

வடமாநிலத் தொழிலாளர் குறித்து வதந்தி  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருப்பூர், மார்ச் 2- திருப்பூரில் வட மாநிலத் தொழிலாளர்கள் குறித்து தவ றான வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று திருப்பூர் பனியன் ராக்ஸ் சங்கம் கோரியுள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வா யன்று பனியன் ராக்ஸ் அசோசியேசன் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் சங்கத்தில் 1500க்கும் மேற்பட்ட மறுசுழற்சி செய்யக்கூடிய தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதில் வட மாநிலத் தொழி லாளர்கள் அதிகளவில் வேலை செய்து வருகின்றனர். தற் போது முகநூல், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களில் சில வீடியோக்களில் தமிழர்கள் வட மாநிலத் தொழிலாளர்க ளைத் தாக்குவது போன்ற வைரல் வீடியோ காட்சிகள் சில  நபர்களால் பரப்பப்பட்டு வருகின்றன. இதனால் வட மாநிலத் தொழிலாளர்கள் அச்சமடைந்து, சொந்த ஊருக்கே செல்கி றோம் என கூறி சென்று விட்டார்கள். இதனால் எங்கள் தொழில் பாதிப்படைந்து வருகிறது. ஆகையால், தவறான வதந்தி பரப்புவோர் மீது தகுந்த நட வடிக்கையை மாவட்ட ஆட்சியர் எடுக்க வேண்டும். மேலும், திருப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பான சூழ்நிலை உள்ளது என தெரிவித்து தொழில் நிறுவனங்களை சீராக நடத்த உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

பெண்ணுக்கு விஷ ஊசி செலுத்தி கொல்ல முயன்ற விவகாரம்: 3 பேர் கைது

சூலூர், மார்ச் 2-  பெண்ணுக்கு விஷ ஊசி செலுத்தி கொல்ல முயன்றதாக கணவர் கைது செய்யப்பட்டார். மேலும் தலைமறைவாக இருந்த பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவர் தனியார் மருத்துவமனையில் கேட்டரிங் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கீர்த்தனா. இவர்களது மகன் சாய் சர்வேஷ். ஸ்ரீதரன் தனது குடும்பத்தினருடன் அன்னூர், செந் தாம்பாளையத்தில் தங்கி உள்ளார்.  இந்தநிலையில், ஸ்ரீதரனுக்கும், அவருடன் வேலை செய்யும் ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள் ளது. இதை கீர்த்தனா கண்டித்து உள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், காதல் விவகாரத்தில் கணவர் உள்பட 3 பேர் தனக்கு விஷ ஊசி செலுத்தி கொல்ல முயன்றதாக கீர்த்தனா அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீ சார் விசாரணை நடத்தியதில் ஸ்ரீதரன், அவரின்  நட்பில் இருந்த ரம்யா, நண்பர் பழனி  ஆகிய 3 பேரும் சேர்ந்து கீர்த்தனா வுக்கு விஷ ஊசி செலுத்தி கொல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து ஸ்ரீதரனை போலீசார் கைது செய்தனர்.  மேலும் தலைமறைவான ரம்யா, பழனியை போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையே  ரம்யா, பழனி 2 பேரும் கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜே.புதூர் பகுதியில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு அன்னூர் போலீசார் விரைந்து சென்று ரம்யா, பழனி ஆகிய 2 பேரை யும் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.

யானைகள் தாக்கி ஒரே நாளில் இருவர் பலி

கோவை, மார்ச் 2- கோவை அருகே உள்ள ஆனைகட்டியில் காட்டு யானைகள் தாக்கியதில் ஒரே நாளில் இரண்டு பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், சின்ன தடாகத்தை அடுத்துள்ள ஆனைகட்டி வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இவை  உணவு மற்றும் குடிநீர் தேடி இரவு நேரங் களில் அவ்வப்போது ஊருக்குள் நுழைவது வழக்கமாகும். இந்நிலையில், வியாழனன்று அதிகாலை 2 மணி அளவில் கோவை வனச் சரகத்திற்கு உட்பட்ட ஆனைக்கட்டி அடி வாரத்தில் மாங்கரை கிராமத்தில் உள்ள ராமச்சந்திரன் என்பவரது தோட்டத்திற்குள் ஒற்றை யானை புகுந்தது. இதுகுறித்து பொது மக்கள் கோவை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடூத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பட்டாசு  வெடித்து அதனை விரட்டும் பணியில் ஈடு பட்டனர். அப்போது யானை  மாங்கரையிலுள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த நிலையில், அப்பகுதியில் வசிக்கும் தனியார் பார்மசி  நிறுவன ஊழியரான மகேஷ் குமாரும்(38) இந்த யானையை விரட்ட முயற்சித்துள்ளார். அப்போது இருட்டில் மறைந்திருந்த யானை  இவரை தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத் திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வனத் துறையினர் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோ தனைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதேபோல் ஆனைகட்டி மலை மேல்  அடர்ந்த வனப்பகுதி ஒட்டி உள்ள துவைப் பதி கிராமத்தைச் சார்ந்த மணி என்பவருடைய மகன் கூலித் தொழிலாளியான மருதாச்சலம் (67) அதிகாலை 5 மணியளவில் இங்குள்ள ஆவின் பால் கம்பெனி வளாகத்திற்கு அரு கில் இயற்கை உபாதைக்காகச் சென்றுள் ளார். அப்போது எதிரில் வந்த ஒற்றை யானை இவரை தாக்கியது. இதில் அவரும் சம்பவ  இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கோவை வனத்துறையின ருக்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து தகவ லறிந்த வனத்துறையினர் சடலத்தை மீட்டு பிரே தப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தடாகம் போலீசாரும் இதுகுறித்து விசாரிக்கின்றனர். ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் யானை தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்ப டுத்தியுள்ளது.

குன்னூர் மருத்துவமனையில் ஆய்வு 

உதகை, மார்ச் 2- குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் மத்திய குழுவி னர் மூன்றாவது நாளாக புதனன்று ஆய்வு மேற்கொண்ட னர். நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள அரசு லாலி மருத்து வமனை நூற்றாண்டு பழைமை வாய்ந்தாகும். இம்மருத்து வமனையில் பல்வேறு மருத்துவ பிரிவுகள் இயங்கி வருகின் றன. இந்த மருத்துவமனையில் மத்திய குழு மருத்துவர்கள் அரவிந்த் ஜெயின், ரெஜி குமார், சஞ்சுலால் பார் யுவா ஆகி யோர் அடங்கிய குழுவினர் கடந்த 2 நாள்களாக ஆய்வு செய்து  வருகின்றனர். இந்நிலையில், மூன்றாவது நாளான புதனன் றும் ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், அரசு மருத்துவ மனையில் உள்ள அனைத்துப் பிரிவுகளிலும் மத்தியக் குழு வினர் சிறப்பு ஆய்வு செய்துள்ளனர். மருத்துவமனையை மேம்படுத்துதல், வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசித் துள்ளனர். இது குறித்த ஆய்வு அறிக்கையை மத்திய அரசிடம் வழங்குவர், என்றனர்.

பூக்கள் விலை வீழ்ச்சி

நாமக்கல், மார்ச் 2- பூக்களின் உற்பத்தி அதி கரித்துள்ளதால், மார்க்கெட் டில் விலை சரிந்துள்ளது. பரமத்திவேலூர் தாலுகா விற்குட்பட்ட பல்வேறு பகுதி களில் குண்டுமல்லி, முல்லை, சம்பங்கி, சாமந்திப்பூ, அரளி பூக்கள் சாகுபடி செய்யப்படு கிறது. இவற்றை விவசாயி கள் அறுவடை செய்து பர மத்திவேலூரில் உள்ள பூ உற்பத்தியாளர்கள் சங்கத் திற்கு கொண்டு வந்து ஏலத் தில் விற்பனை செய்கின்ற னர். கடந்த சில வாரங்களாக  விலை ஏற்ற, இறக்கமாக  இருந்து வருகிறது. தற்போது கோடை காலம் தொடங்கி, யுள்ளதால் பூக்களின் விளைச் சல் அதிகரித்துள்ளது. அத னால், பரமத்திவேலூரில் உள்ள 2 பூ ஏல மார்க்கெட்டி லும்  பூக்களின் விலை குறைந் துள்ளது.