திருப்பூர், ஜூன் 4 - ஊத்துக்குளி ஒன்றியம், இச்சிப்பாளையம் ஊராட்சி புதுப்பாளையம் காலனியில் பெண்கள் பொதுக் கழிப்ப றையை உடனடியாக பராமரித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் கோரியுள்ளது. அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் புதுப் பாளையம் கிளை சார்பில் இச்சிப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு கொடுக்கப்பட்டது. புதுப்பாளையம் காலனி பெண்கள் கழிப்பறை கடந்த ஒரு மாத காலமாக மூடப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் இப்பகுதியில் உள்ள கழிப்பறை மூடப்பட்டு இருப்பதால் பெண்கள், குழந்தைகள் பொது வெளியில் காலைக்கடனை கழிக்க செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பொதுக் கழிப்பிடம் மூடப்பட்டிருப்பது குறித்து கேட்ட தற்கு, பராமரிப்பு பணிகள் காரணமாக மூடி வைக்கப் பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை பணி எதுவும் நடைபெறுவதாக தெரியவில்லை. எனவே, விரைந்து பராமரிப்பு பணிகளை செய்து முடித்து பொதுக் கழிப்பறையை பெண்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்க வேண்டும் என்று விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். இந்த கழிப்பறை பராமரிப்பு பணிகளை விரைவில் செய்து கொடுப்பதாக ஊராட்சி மன்ற தலைவர் ஒப்புதல் அளித் துள்ளார். இந்நிகழ்வில் விவசாய தொழிலாளர்கள் சங்க தாலுகா தலைவர் ஆர்.மணியன், கிளைச் செயலாளர் நந்தகுமார், கமிட்டி உறுப்பினர் வேலுச்சாமி, சிபிஎம் கிளைச் செய லாளர் ச.மூர்த்தி மற்றும் எல்.ஐ.சி.பாலசுப்பிரமணியம் ஆகி யோர் கலந்து கொண்டனர்.