தருமபுரி, அக்.17- பொது கழிவறையை சீரமைத்து, பரா மரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியு றுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், தடங்கம் ஊராட்சிக் குட்பட்ட அவ்வை நகர் பகுதியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர். அப்பகுதியில் பொதுமக்களின் பயன் பாட்டிற்காக சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. அதனருகிலேயே பொதுமக்கள் பயன்பாடு மற்றும் சமுதாயக்கூடத்தை பயன்படுத்து வோர் நலன் கருதி, 2014 - 15 ஆம் ஆண்டில், ரூ.2.95 லட்சம் மதிப்பீட்டில் பொதுக்கழிவறை கட்டப்பட்டது. தண்ணீர் வசதி இல்லாததால் கழிவறை பயன்பாடு இல்லாமல் உள்ளது. தருமபுரி நகர் பகுதியையொட்டியுள்ள அவ்வை நகரில் வசிக்கும் ஏழை மக்கள், பொது கழிவறை இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, பொதுமக்களின் நலன்கருதி பொது கழிவறையை சீரமைத்து, தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.