தருமபுரி, பிப்.8- பாலக்கோடு அருகே உள்ள சின் னாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளான பஞ்சப் பள்ளி, பெரியானூர், அத்திமுட்லு, மாரண்டஅள்ளி, கொலசனஅள்ளி, பி.செட்டிஅள்ளி, ஜெர்த்தலாவ், குஜ்ஜர அள்ளி, எர்ரனஅள்ளி, பேளாரஅள்ளி, சாமனூர் உள்ளிட்ட பகுதிகளில் மொத் தம் 4 ஆயிரத்து 500 ஏக்கர் நிலத்தில் விவசாயிகள், நெல், கரும்பு, வாழை, தக்காளி, மஞ்சள் உள்ளிட்ட பயிர் களை சாகுபடி செய்து வருகின்றனர். இந் தாண்டு எதிர்பார்த்த தென்மேற்கு மற் றும் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனாதால், கோடை காலம் துவங் கும் முன்னரே ஏரி, குளம், கிணறு, ஆழ் துளை கிணறுகளின் நீர்மட்டம் வெகு வேகமாக குறைந்து வருகிறது. இத னால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற் பட்டுள்ளதால், விவசாய பயிர்கள் கரு கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, 50 அடி கொள்ளளவு கொண்ட பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் தற்போது 39 அடி தண்ணீர் உள்ளது. சின்னாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவ தன் மூலம் செங்கன்பசுவந்தலாவ் ஏரி, ஜெர்தலாவ் ஏரி, தாமரை ஏரி ஆகியவை மூலம் 4 ஆயிரத்து 500 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும். எனவே, தமிழக அரசு உடனடியாக சின்னாறு அணையிலிருந்து பாசனத்திற்கு உடன டியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி யுள்ளனர்.