districts

வனவிலங்குகளை கட்டுப்படுத்த 8 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு வேலி அமைக்க வன அலுவலர்களுக்கு வலியுறுத்தல்

திருப்பூர், டிச.2- விளைநிலங்களை பாதிக்கக் கூடிய வனவிலங்குகளை கட்டுப்ப டுத்த 8 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு  வேலி அமைக்க வேண்டும் என விளைநிலங்களில் வனவிலங்கு நட மாட்டத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட் டத்தில் வன அலுவலர்களுக்கு அறி வுறித்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், ஊத்துப்பாளையம், சென் னாக்கல்பாளையம், தளவாய்பட்டி னம் ஆகிய கிராமங்களில் உள்ள  வனத்துறைக்கு சொந்தமான காப் புக்காடுகளில் வனவிலங்குகள் உள் ளதால் அருகில் உள்ள விளை நிலங்கள் பாதிக்கப்படுவதாக ஊத் துப்பாளையம், தளவாய்ப்பட் டினம், செலாம்பாளையம், நாரா ணபுரம், சின்னகாம்பாளையம் பகு தியை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து  வந்தனர். இந்நிலையில் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தலை மையில், தாராபுரம் வருவாய் கோட் டாட்சியர் அலுவலகத்தில் விளை நிலங்களில் வனவிலங்கு நடமாட் டத்தை கட்டுப்படுத்துவது தொடர் பான ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் விளைநிலங் களை பாதிக்கக்கூடிய வனவிலங் குகளை கட்டுப்படுத்த விளைநிலங் களின் அருகில் உள்ள காப்புகாடுக ளில் 8 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு  வேலி அமைக்க வேண்டும். வனவி லங்குகளை வனபகுதிகளுக்கு இட மாற்றம் செய்ய வேண்டும்.  பாதிக்கப்பட்ட விளைநிலங்க ளுக்கு இழப்பீடு வழங்க நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும். வனவிலங்குகள் நடமாட்டத்தை கட் டுப்படுத்த கூடுதல் வனப்பணியாளர் களை நியமித்து வனவிலங்குகளி டமிருந்து விளைநிலங்களுக்கு பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் வன அலு வலர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.  இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சி யர் தா.கிறிஸ்துராஜ், மாவட்ட வன  அலுவலர் தேவேந்திர குமார் மீனா,  துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து  கொண்டார்கள்.