districts

அவிநாசியில் சாலையோர வியாபாரிகளை பாதுகாக்க மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தல்

அவிநாசி, அக.27 – அவிநாசி நகரில் சாலையோர வியாபாரிகள் கடை நடத்தும் இடத் தில் இருந்து அவர்களை வெளியேற் றும் நோக்கத்தில் சிலர் மோதல் போக்கை மேற்கொண்டுள்ளனர். இப்பிரச்சனையில் சாலையோர வியாபாரிகளைப் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கள் எதிர்பார்க்கின்றனர். அவிநாசி பேரூராட்சிக்கு உட் பட்ட புதிய பேருந்து நிலையம் முதல் பழைய பேருந்து நிலையம் வரை 150க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த வியாபாரிகள் ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டில் அமைத்து பனியன் துணிகள், செல் போன் உதிரி பாகங்கள் போன்ற வற்றை விற்பனை செய்து வருகின் றனர்.  அவிநாசி சுற்றுவட்டார பகுதி களில் பனியன் கம்பெனிகளில் தங்கி வேலை செய்யும் புலம் பெயர்ந்த தொழிலாளிகள் தேவையான பொருட்கள் வாங்குவதற்காக கம் பெனி நிர்வாகத்தினர் ஞாயிற்றுக்கி ழமைகளில் வாகனம் வைத்து அழைத்து வருவது வழக்கம். இந்த தொழிலாளிகள்  பெரும்பாலும் மலிவு விலையில் சாலையோர வியா பாரிகளிடம் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இதன் காரணமாக கடைகளில் வியாபாரம் பாதிக்கிறது என்றுகூறும் கடை உரிமையாளர்கள், வணிகர்  சங்கம் சார்பில் சாலையோர வியாபா ரிகளை முறைப்படுத்த வேண்டும்  என்று கோரிக்கை விடுத்தனர். வணி கர் சங்கத்துக்கு ஆதரவாக தினசரி மார்க்கெட் உரிமையாளர்களும் செயல்படுகின்றனர். இந்நிலையில் அவிநாசி பேரூ ராட்சியில் சாலையோர வியாபாரி கள் தொழிற்சங்கம், வணிகர் சங்கம்,  பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ள டக்கிய கூட்டம் ஏற்பாடு செய்யப்பட் டது. இதில் பனியன் துணி வியாபாரம்  செய்வோரை மட்டும்  சந்தைக்க டைக்கு மாற்ற வேண்டும் என்று தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. மற்ற கடை களை ஒழுங்குபடுத்தி அதே இடத் தில் விற்பனை செய்து கொள்ளவும்,  இப்பிரச்சினையை மாவட்ட ஆட்சி யர் கவனத்திற்கு கொண்டு சென்று,  ஆய்வு செய்த பிறகு மாற்றம் செய்து  கொள்ளலாம் எனவும் முடிவு செய் யப்பட்டது. இந்நிலையில் புதிய பேருந்து நிலையம்  அருகே சாலையோர வியா பாரி  வழக்கமாக விற்பனை செய்யும்   இடத்தில் வெள்ளியன்று சிலர் வேண் டுமென்றே தார்ப்பாயில் தக்காளியை  கொட்டி விற்பனையைத் தொடங்கி னர்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சாலையோர வியாபாரி நான் விற்பனை செய்யும் இடத்தில்  இப்படி அநியாயம் செய்கிறீர்களே என்று கேட்டதற்கு,  சாலையோர வியாபாரியிடம், வணிகர் சங்கத் தைச் சேர்ந்த சிலர் கடும் வாக்குவா தத்தில் ஈடுபட்டு, கைகலப்பும் ஏற்பட் டுள்ளது. இந்நிலையில் அவிநாசி காவல்து றையினர் சாலையோர வியாபா ரியை அந்த இடத்தில் கடை போட வேண்டாம், பேசிக்கொண்டு கடை போடலாம் என்று அறிவுறுத்தினர். அத்துடன் வழக்கமாக சாலையோர  வியாபாரி கடை போடும் இடத்தில்  பேரிகார்டு வைத்து மறைத்துள்ள னர். அத்துடன் தற்பொழுது பேரூ ராட்சி கவுன்சிலர்கள் சிலர்  சாலை யோர வியாபாரிகளை முறைப்ப டுத்த வேண்டும் என்று மீண்டும் பேரூ ராட்சியில் வலியுறுத்தியுள்ளனர்.  சாலையோர வியாபாரிகள் தங் கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க  மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை  மனு அளித்துள்ளனர். ஆனால் வணி கர் சங்கங்களோ சாலையோர வியா பாரிகளை அச்சுறுத்தி அப்புறப்ப டுத்தும் விதத்தில் மோதல் போக்கை  கடைப்பிடிக்கின்றனர். இது, அமை தியாக இருக்கும் அவிநாசியில் சட் டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத் துவதாக உள்ளது. எனவே மாவட்ட  நிர்வாகம் சாலையோர வியாபாரி களை பாதுகாக்கும் வகையில், வியா பாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கி, பேரூராட்சி நிர்வாகம், சாலையோர வியாபாரிகள், அரசு நிர் வாகம் இணைந்து ஒரு குழு அமைக்க  வேண்டும், சாலையோர வியாபாரி களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும், சாலையோர வியாபாரி களை அச்சுறுத்தும் நபர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என  சாலையோர வியாபாரிகள் வலியு றுத்தியுள்ளனர்.