districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

மின் விபத்தில் ஒப்பந்த ஊழியர் இறப்பு  நிவாரணம் சிஐடியு வழங்க வலியுறுத்தல்

தருமபுரி, ஜூன் 24- தருமபுரி அருகே மின்விபத்தால் இறந்த ஒப்பந்த  தொழி லாளியின் குடும்பத்திற்கு உரிய நிவரணம் வழங்க வேண்டுமென சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப் பின் மாவட்ட தலைவர் பி.ஜீவா,மாவட்ட செயலாளர் தீ. லெனின்மகேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித் துள்ளதாவது. தருமபுரி மின் பகிர்மான வட்டம், தருமபுரி கோட்டம், அதியமான் கோட்டை உபகோட்டத்திற்க்குட்பட்ட வெண் ணாம்பட்டி பிரிவு அலுவலகத்தில் ஒப்பந்த தொழிலாளராக எம்.வையாபுரி பணியாற்றிவந்தார். இவரை, தடங்கம் அருகே  மின்மாற்றில் பழுது நீக்க, கம்பியாளரால் அழைத்து சென்ற   ஒப்பந்த தொழிலாளி எம்.வையாபுரி மின்சாரம் தாக்கி சம்பவ  இடத்திலேயே இறந்தார்.    மின்விபத்தில் மரணம் அடைந்த வையாபுரி அவர்களின்  குடும்பத்தை பாதுகாக்கின்ற வகையில் நிவாரணமாக ரூ.20 லட்சம்  வழங்கிட வேண்டும் என்றும், விபத்துக்கு காரண மானவர்கள்  மீது துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை  எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். 

பட்டியல் இன மக்களுக்கு நிலம் வழங்கு

ஈரோடு, ஜுன் 24- அந்தியூர் அருகே மாத்தூர் கிராம பட்டியல் இன மக்க ளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலங்களை உடனடியாக வழங்க வேண்டுமென தலித் விடுதலை இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.  இதுகுறித்து அவர்கள் அளித்த மனுவில் தெரிவித்தி ருப்பதாவது, தமிழ்நாட்டில் 1956களில் நிலகுடியேற்ற கூட் டுறவு சங்கங்கள் பல உருவானது. இச்சங்கங்கள் மூலம் மேற்கு மண்டலத்தில் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பட்டியலினத்தவர்களுக்குப் பெற்றுத்தரப்பட்டன. இவ்வாறு நிலம் பெற்ற பயனாளிகள் வெளியேற்றப்பட்டு பட்டியலினத்தவர்கள் அல்லாதவர்கள் பயன்பாட்டில் நிலங்கள் உள்ளன.  இவ்வாறு அந்தியூர் வட்டம், நில குடியேற்ற கூட்டுறவு  சங்கம் சார்பாக மாத்தூர் கிராம பட்டியல் இன மக்களுக்கு சுமார் 250 ஏக்கர் நிலம் வழங்க ஆவண செய்யப்பட்டது. அதன்படி நிலங்களை வழங்காமல் இன்று வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.எனவே வருவாய் கணக்குகளில் ஒதுக்கக் காடுகள் என வகைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை நில குடியேற்ற சங்க உறுப்பினர்களுக்கு வழங்க  வேண்டும் என தெரிவித்துள்ளனர்.  மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா விடம் மனு  அளிக்கும் இயக்கத்தில், தவிஇ மாநில தலைவர் ச. கருப்பையா, பொதுசெயலாளர் மாவீ.சசிக்குமார், ஈரோடு மாவட்டச்செயலாளர் பொன்.சுந்தரம் உள்ளிட்டோர் பங் கேற்றனர். 

நவீன கருவி மூலம் யானைகளுக்கு கண் பரிசோதனை

கோவை, ஜூன் 24- டாப்சிலிப் கோழிகமுத்தி முகாமில்  யானைகளுக்கு நவீன கருவி மூலம் கண் பரிசோதனை செய்யப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித் தனர். ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் அருகே  கோழிகமுத்தி, வரகளியாறு ஆகிய இடங்களில் வளர்ப்பு யானைகள் முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு  கலீம், சின்னதம்பி உட்பட 27 யானை கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், அடிக்கடி யானைகளின் உடல் நிலை குறித்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், புலிகள் காப்பக கள  இயக்குநர் ராமசுப்பிரமணியம் உத்தர வின் பேரில், துணை இயக்குநர் பார்கவ  தேஜா மேற்பார்வையில் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா கால்நடை  மருத்துவர் ஸ்ரீதர், ஆனைமலை புலிகள்  காப்பக வன கால்நடை மருத்துவர்கள் விஜயராகவன், சுகுமார் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் யானை களுக்கு நவீன கருவி மூலம் கண் பரி சோதனை மேற்கொண்டனர். அப் போது வனச்சரகர் சுந்தரவேல் மற்றும்  வனத்துறையினர், பாகன்கள் உடன் இருந்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரி கள் கூறுகையில், இம்முகாமில் யானை களின் வயது, எடைக்கு ஏற்ப மருத்து வர்களின் பரிந்துரையின் பேரில் உணவு கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கி டையில் யானைகளுக்கு 3 மாதத்திற்கு ஒரு முறை சென்னை வண்டலூர் உயி ரியல் பூங்காவில் இருந்து வரும் கால் நடை மருத்துவர்கள் மூலம் யானை களுக்கு கண் மற்றும் உடல் பரிசோ தனை செய்யப்படுகிறது. தற்போது சில  யானைகளின் கண்ணில் இருந்து நீர் வடிதல், கண்புரை, பார்வை குறைவு  உள்ளிட்டவை குறித்து தெரிவிக்கப் பட்டது.  இதைத்தொடர்ந்து தமிழன் (45), செல்வி (46), ஆண்டாள் (56), துர்கா (29), ஓய்வுபெற்ற யானை செல்வி (60)  ஆகிய யானைகளுக்கு அல்ட்ரா சவுண்ட் ஐ ஸ்கேனர் என்னும் நவீன கருவி மூலம் கண்கள் ஸ்கேன் செய் யப்பட்டது. இதையடுத்து யானை களுக்கு கொடுக்க வேண்டிய சிகிச்சை கள் குறித்து மருத்துவர்கள் ஆலோ சனை வழங்கியதாக தெரிவித்தனர்.

குப்பைகளுக்கு மர்ம நபர்கள்  தீ வைப்பதால் பொதுமக்கள் அவதி

திருப்பூர், ஜூன் 24 - உடுமலை அருகே பெரிய கோட்டை ஊராட்சியில் குப்பை களுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பதால் அப்பகுதி மக்கள் கடும்  பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.  திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெரிய கோட்டை  ஊராட்சி சிவசக்தி காலனி அருகில் குப்பைகளுக்கு மர்மந பர்கள் தொடர்ந்து தீ வைக்கின்றனர். இதனால் புஸ்பகிரி  வேலன் நகர், காந்திநகர் பகுதிகளில் வசித்து வரும் 500க்கும்  மேற்பட்ட குடும்பங்கள் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல்வேறு  வகை உடல் உபாதைகளால் அவதி அடைந்து வருகின்றனர்.  ஆகையால் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் முறையாக கண்காணித்து குப்பைகளுக்கு தீ வைக்கும் மர்ம நபர்கள்  மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள்  பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும்  ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டினால் ஊராட்சிமன்ற அலுவலகம் முற்றுகை உட்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபடவும் முடிவு செய்திருப்பதாக மக்கள்  கூறினர்.

அடிப்படை வசதிகள் செய்து தர கோரி சிபிஎம் மனு

திருப்பூர், ஜூன் 24 - திருப்பூர் மாநகராட்சி 13 ஆவது வார்டுக்கு  உட்பட்ட பத்மாவதிபுரம், ஏவிபி லேஅவுட் உள்ளிட்ட பகுதிகளில் அடிப்படை வசதி களை செய்துதர வலியுறுத்தி மாநகராட்சி முத லாவது மண்டலத் தலைவர் உமா மகேஸ்வரி யிடம் மார்க்சிஸ்ட் கட்சியினர் சனியன்று கோரிக்கை மனு அளித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பத்மாவதி  கிளையின் சார்பில் முதலாவது மண்டல தலைவரிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறியி ருப்பதாவது, திருப்பூர் மாநகராட்சி 13  ஆவது வார்டுக்கு உட்பட்ட ஏவிபி லேஅவுடில்  5 வீதிகளும், காந்திநகரில் 5 வீதிகளும் உள் ளன. இதில் 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட  வாக்காளர்கள் உள்ளிட்டு 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும் வசித்து வருகின்ற னர். இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல்  முடிந்து ஒன்றரை வருடங்கள் ஆன பின்னரும்  இப்பகுதியில் பெரும்பாலான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. எனவே  அனைத்து வீதிகளுக்கும் காலம் தாழ்த்தாமல்  உடனடியாக தார்ச் சாலைகள் அமைக்கப்பட  வேண்டும். தூய்மைபணி மேற்கொள்ள கூடு தலாக இரண்டு பணியாளர்கள் நியமிக்க  வேண்டும். அள்ளிப் போடப்படும் கழிவுகளை  உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை  எடுக்க வேண்டும்.  உப்பு தண்ணீர் வசதி  இல்லாத வீடுகளுக்கு உடனடியாக உப்பு  தண்ணீர் பைப்புகள் அமைத்து தரவேண்டும்.  வீடு மற்றும் தொழிற்சாலை குப்பைகளை  தினம் தோறும் வாங்க வேண்டும்.  அப்படி  வாங்கும்போது பணம் கேட்பது தடுக்க நட வடிக்கை எடுக்க வேண்டும்.  எரியாமல் உள்ள  தெருவிளக்குகள் உடனடியாக சரி செய்யப் பட்டும், தெரு விளக்கு இல்லாத முக்கிய சந்திப்புகளில் புதிய தெருவிளக்குகள் அமைத்தும் தர வேண்டும்.  காந்திநகர் 2,  ஏவிபி லேஅவுட் 2 ஆவது வீதி, கற்பக விநாய கர் கோவில் வீதிகளில் சரியாக திட்டமிடப்ப டாமல் கட்டப்பட்ட சாக்கடைகளால் கழிவுநீர்  செல்லாமல் உள்ளது.சரியான திட்டமிடலு டன் அந்த வீதிகளுக்கு புதிதாக சாக்கடை  கால்வாய்கள் கட்ட வேண்டும். நல்ல தண்ணீர்  குழாய் உடைப்பால் பல வீடுகளுக்கு ஆண்டு  கணக்கில் தண்ணீர் கிடைப்பதில்லை.  எனவே நான்காவது குடிநீர் திட்ட குழாய் மூல மாக உடனடியாக இணைப்பு கொடுக்க  வேண்டும் உள்ளிட்ட இப்பகுதி மக்களின்   நீண்ட நாள் கோரிக்கைகளை உடனடியாக  நிறைவேற்றித் தரும்படி கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.  இந்நிகழ்வில், கட்சியின் மூத்த உறுப்பி னர் ஆர். ஈஸ்வரனுடன், கிளைச் செயலாளர்  செல்வகுமார், பவானி சண்முகம், சிவபிர காசம், கணேஷ், நாகமாணிக்கம் உள்ளிட் டோர் உடன் இருந்தனர்.

விவசாய நிலங்களில் மண் பரிசோதனை செய்து  சான்றிதழ்கள் வழங்க விவசாயிகள் கோரிக்கை

திருப்பூர், ஜூன் 24- விவசாய நிலங்களில் வேளாண்மை துறையினர் மண் பரிசோதனை செய்து சான்றி தழ்கள் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் சார்பில் சார்ஆட்சியர் அலுவலகத்தில் வியாழனன்று மனு அளிக் கப்பட்டுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க வடக்கு ஒன் றிய செயலாளர் எஸ்.அப்புசாமி விவசாயிகள்  குறைதீர்ப்பு கூட்டத்தில் வழங்கிய மனுவில்  கூறியிருப்பதாவது, கிராமப்புறங்களில் விவசாயிகளுக்கு விவசாயம் சார்ந்த தொழில் நுட்பங்களை சொல்லிக் கொடுத்து உதவ தமிழக அரசு  வேளாண்மை துறை மூலம் அலுவலர்களை  நியமனம் செய்துள்ளது. விவசாய நிலங்க ளில் மண்ணின் தரம் கெட்டுப் போய் உள்ள தால், தென்னை மரங்களில் 5 முதல் 10 தேங் காய் வரையில்தான் உள்ளது. வாழை மரத் தண்டில் துளைப்பான் ஏற்பட்டு வாழைக் குலை பிஞ்சிலேயே முறிந்து விடுகிறது. மஞ் சள், பருத்தி, கடலை, நெற்பயிர், சோளம்,  கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களில் வைரஸ்  நோய், பூச்சி நோய்கள் தாக்குதல் மற்றும்  விவசாய நிலங்களில் போதுமான விளைச் சல்கள் இல்லாததால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. இதனால் விவசா யிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. விவசாய பயிர்கள் நோய் தாக்குதலில் இருந்து விவசாயத்தை பாதுகாக்க, வேளாண்மை துறை அலுவலர்கள் கூட்டங் களில் பேசுவது, விவசாய நிலங்களில் உள்ள  மண் பரிசோதனை செய்து மண்ணிற்கு ஏற் றபடி உரம், நுண் ஊட்டச்சத்துக்கள் வாங்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் வேளாண்மை துறை அலுவலர்கள் விவ சாய நிலங்களுக்கு வந்து மண் பரிசோதனை  செய்வதில்லை. திருப்பூர் வடக்கு சட்டமன்ற  தொகுதிக்கு உட்பட்ட பொங்குபாளையம், கணக்கம்பாளையம், காளிபாளையம், பெரு மாநல்லூர், ஈட்டிவீரம்பாளையம், மேற்குப் பதி, தொரவலூர், பட்டம்பாளையம் ஆகிய  ஊராட்சிகளில் உள்ள விவசாய நிலங்கள் மண் பரிசோதனை செய்து அதற்கு ஏற்றபடி பயிர்களுக்கு உரம் வழங்குவதற்கு ஆலோ சனை வழங்குவது. மேலும், மண் பரி சோனை செய்து சான்றிதழ் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்  கூறப்பட்டுள்ளது.

மின்சார நிலைக் கட்டணத்தை ரத்து செய்ய மாநில அமைச்சர் முன்னிலையில் சைமா கோரிக்கை

திருப்பூர், ஜூன் 24 – கடந்த ஆண்டு உயர்த்தப்பட்ட மின்சார நிலைக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்,  பீக்ஹவர் பயன்பாடு என உச்ச நேர மின் நுகர் வுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை பரிசீ லனை செய்ய வேண்டும் என்று மாநில ஜவு ளித் துறை அமைச்சர் காந்தி முன்னிலை யில் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) தலைவர் வைகிங் ஏ.சி.ஈஸ் வரன் கூறியுள்ளார். கோவையில் கடந்த 22ஆம் தேதி ஜவுளி தொழி்ல்நுட்ப மேம்பாட்டு ஆலோசனைக் கூட்டம் மாநில ஜவுளித்துறை அமைச்சர் காந்தி முன்னிலையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் சைமா தலைவர் வைகிங் ஏ.சி.ஈஸ் வரன் ஜவுளித் தொழில் மேம்பாட்டுக்கு மேற் கொள்ள வேண்டிய விசயங்கள் குறித்து கூறி னார்.  குறிப்பாக பஞ்சு, நூல் விலையைத் தீர் மானிப்பதில் விவசாயிகள், வணிகர்கள், ஜின் னர்கள், நூற்பாலைகள், அரசின் கொள்கை, இந்திய பருத்திக் கழகம் என அனைவரின் பங்களிப்பும் உள்ளது. இவற்றை எல்லாம் கடந்து நூல் கொள்முதல் செய்யும்போது நூலின் விலை சீராக இல்லாமல் ஏற்றத் தாழ்வுகளுடன் காணப்படுகிறது. இதனால் உற்பத்தி மற்றும் வணிகம் மிகவும் பாதிப் புக்கு உள்ளாகிறது. எனவே இப்பிரச்சனை யில் பின்னலாடைத் தொழில் பாதிப்பை கண் டறிந்து களைய, நிரந்தரமான கொள்கையை  வகுக்க வேண்டும். 2022 ஆம் ஆண்டில் உயர்த்தப்பட்ட மின் சார நிலைக்கட்டணத்தை ரத்து செய்ய வேண் டும்.  பீக்ஹவர் ரீடிங் என உச்சநேர மின் பயன் பாட்டுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை பரிசீலிக்க வேண்டும்.  வங்க தேசத்தில் இந்தியாவில் இருந்து வரி இல்லாமல் மூலப்பொருட்களை பெற்றுக்  கொண்டு, துணி, ஆடைகளை மீண்டும் இந் திய சந்தைக்கு அனுப்புகின்றனர். இதனால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் போட்டி போட  முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே மத்திய  அரசுத் துறைகளுடன் தொடர்பு கொண்டு  நம் நாட்டு பின்னலாடை உற்பத்தியாளர்க ளுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும்  வைகிங் ஏ.சி.ஈஸ்வரன் கேட்டுக் கொண்டிருக் கிறார்.

திருப்பூரில் இன்று சைக்ளத்தான்

திருப்பூர், ஜூன் 24 – திருப்பூர் மாநகராட்சி யில் கலைஞர் நூற்றாண்டு விழா, எனது குப்பை எனது பொறுப்பு, இயற்கையைப் பாதுகாப்போம் மற்றும் சீர் மிகு நகரத் திட்டம் ஆகிய  நிகழ்வுகளுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகை யில் சைக்ளத்தான் எனப்ப டும் சைக்கிள் விழிப்புணர் வுப் பேரணி ஞாயிறன்று நடத்தப்படுகிறது. மாநகராட்சி வளாகத்தில்  மாவட்ட ஆட்சியர் கிறிஸ்து ராஜ் தலைமையில் தொடங்கி கருவம்பாளை யம் சந்திப்பு, நடராஜ் தியேட் டர் பாலம், நேரு வீதி, டவுன் ஹால், மேம்பாலம், அவி நாசி சாலை, தீயணைப்பு நிலையம், 60 அடி சாலை, பிஎன் சாலை, புஷ்பா சந் திப்பு, மேம்பாலம், குமரன் சாலை, வளர்மதி வழியாக மீண்டும் மாநகராட்சி வளா கத்தை இந்த சைக்கிள் பேரணி நிறைவடைகிறது.

அனுப்பட்டி போராட்டம் 100ஆவது நாள்

திருப்பூர், ஜூன் 24 – அனுப்பட்டியில் மக்க ளுக்கும், சுற்றுச்சூழலுக்கும்  பாதிப்பு ஏற்படுத்திவரும் தனி யார் இரும்பு உருக்கா லைக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் காத்திருப்பு போராட்டம் நூறாவது நாளைத் தொட்டது. சனியன்று நடைபெற்ற இப்போராட்டத்தில் பல் வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்துப் பேசினர். இப் போராட்டத்தின் ஒரு பகுதி யாக தங்கள் எதிர்ப்பை பதிவு  செய்யும் விதத்தில் போராட் டத்தில் பங்கேற்றோர் கஞ்சி  காய்ச்சி குடிக்கும் போராட் டத்தை நடத்தினர்.

சிறுத்தையின் பிடியில் இருந்து உயிர் தப்பிய நாய்

உதகை, ஜூன் 24- குன்னூரில் சிறுத்தையின் பிடியில் இருந்து நொடி பொழுதில் உயிர் தப்பிய வளர்ப்பு நாய் குறித்த காட்சிகள் சிசிடிவியில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைர லாகி வருகிறது. குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இரவு நேரங் களில் வளர்ப்பு பிராணிகளை வேட்டையாட சிறுத்தை குடி யிருப்பு பகுதிக்குள் வருகின்றன. இந்நிலையில், குன்னூர் அருகே உள்ள ஜெகதளா பகுதியில் நள்ளிரவில் சிறுத்தை  ஒன்று புகுந்துள்ளது. கிராமத்தில் வளர்ப்பு நாயை வேட்டை யாடி அதனை தூக்கி செல்ல முயன்றது. அப்போது நொடி பொழுதில் சிறுத்தையின் பிடியில் இருந்து வளர்ப்பு நாய் தப்பி சென்றது. இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வரு கின்றனர்.

சாலையில் விளையாடும் குட்டி யானைகள்

கோவை, ஜூன் 24- கோவை, மருதமலை சாலையில் யானைகள் முகாமிட்டிருந்த நிலையில், சாலையில்  குட்டி யானைகள் விளையாடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கோவை மேற்கு தொடர்ச்சியொட்டிய மலைப்பகுதிகளான ஆனைகட்டி,  தடாகம், மாங்கரை, பெரியநாயக்கன் பாளையம், மருதமலை ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக யானைகள் கூட்டம்  கூட்டமாக நடமாடி வருகிறது. வனப்பகுதி யில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி மற்றும் உணவுத்தேவைக்காக, அவ்வப்போது குடியிருப்பு பகுதிக்குள் வந்து விடுகிறது.  இந்நிலையில், மருதமலைக்கு செல்லும்  சுற்றுலா பயணிகள் மலைப் பாதையில்  நடந்து செல்ல மாலை 5 மணிக்கு மேல்  அனுமதி இல்லை. இருசக்கர வாக னங்களில் செல்லும் நபர்களுக்கு காலை  7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும்  தான் அனுமதி என்றும் வனத்துறை அறிவித்தது.  கடந்த சில தினங்களுக்கு முன்பு   மருதமலை  அடிவாரம் ஐ.ஓ.பி காலனி பகுதி யில் யானை தாக்கி குமார் என்பவர் உயிரி ழந்த நிலையில், வனத்துறையினர் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.  வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம்  யானை நடமாடும் பகுதிகளுக்கு பொது மக்கள் செல்ல வேண்டாம் என்று  எச்சரிக்கை  விடுத்து வருகின்றனர். இந்நிலையில், மருத மலை சாலையில் உள்ள ஐ.ஓ.பி காலனி பகுதி யில் இரவு யானைக் கூட்டம் சாலையோரம் முகாமிட்டிருந்தது. அப்போது இரண்டு குட்டி  யானைகள் சாலையின் நடுவே விளையாடிக்  கொண்டு இருக்கும்  வீடியோ  காட்சிகள் சமூக  வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

சேலம், ஜூன் 24- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து  வருகிறது.  கர்நாடகா மாநிலத்தில் பெய்து வந்த  மழையால் அங்குள்ள அணைகள் நிரம் பியது. தற்போது காவிரி கரையோர பகுதி களில் மழை குறைந்து வருகிறது. இதனால்  அங்கிருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரா னது அதிகரித்தும், குறைந்தும் காணப்படு கிறது. வியாழனன்று அணைக்கு விநாடிக்கு  235 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், வெள்ளியன்று அணைக்கு வரும்  நீரின் அளவு 223 கன அடியாக இருந்தது. இந்நிலையில், சனியன்று காலை அணைக்கு  வரும் நீரின் அளவு 153 கன அடியாக குறைந் துள்ளது.  தற்போது அணையின் நீர் மட்டம் 95.53  அடியாகவும், அணையின் நீர் இருப்பு 59.20  டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா  சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணை யிலிருந்து 90ஆவது ஆண்டாக ஜூன் 12  ஆம் தேதியன்று தண்ணீர் திறக்கப்பட் டுள்ளது. இதனால் சேலம், கரூர், திருச்சி,  தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடு துறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங் களில் குறுவை, சம்பா சாகுபடி செய்யப் படும். இதன் மூலம்17 லட்சம் ஏக்கர் பாசனம்  வசதி பெறும். மேட்டூர் அணையில் இருந்து  டெல்டா பாசனத்திற்காக 3,000 கன அடி  தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் 10,000  கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது  படிப்படியாக மேலும் அதிகரிக்க வாய்ப் புள்ளது. அணையின் நீர் இருப்பு 100 அடிக்கும் மேல் உள்ளதால் குறிப்பிட்ட காலத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. தற்போது நீர்  வரத்து குறைந்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் சரிந்தது. மேட்டூர்  அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க  மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப் பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கி யுள்ளது. அணையில் இருந்து உபரி நீர் 2,500 கன  அடி 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர்  திறக்கப்பட்டது நிறுத்தப்பட்டது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீரூம் நிறுத்தப்பட் டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 1,500 கன அடி தண்ணீர்  திறக்கப்பட்டு வருகிறது.

பாஜக நிர்வாகி மீது கல்லூரி மாணவர் புகார்

ஈரோடு, ஜுன் 24- திருட்டு பழி சுமத்தி தற்கொலைக்கு தூண்டியதாக சென்னிமலை ஒன்றிய பாஜக  நிர்வாகி மீது கல்லூரி மாணவர் காவல் கண் காணிப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளார். அதில், ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே நெசவாளர் காலனியைச் சேர்ந் தவர் கே.கோபாலகிருஷ்ணன் (எ) சுரேஷ்.  இவர் தனது தாய் மற்றும் சகோதரியுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். ஈரோடு  கலைக்கல்லூரியில் பி.காம் படித்து வரு கிறார். தந்தை இறந்து விட்டதால், உழவன் பால் பண்ணை என்ற விற்பனையகத்தில் பகுதி நேரமாக வேலை செய்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு  சம்பளம் போதவில்லை என வேலைக்குச் செல்லவில்லை. ஆனால், வேறு ஆள்  சேர்க்கும் வரை வேலைக்கு வரச் சொன் னார்கள். அதனால் பகுதிநேர வேலையைத்  தொடர்ந்தார் சுரேஷ். இந்நிலையில், பால்  பண்ணையின் உரிமையாளரான சென்னி மலை ஒன்றிய பாஜக நிர்வாகி சுந்தரராசு,  காவல் நிலையத்தில் ஒரு புகார் செய்திருந் தார். அதில் நான் ரூ.3 லட்சம் திருடியதாகக் கூறியிருந்தார். காவல் நிலையத்தில் நடை பெற்ற விசாரணையில் குற்றத்தை ஒப்புக் கொள் அல்லது சிறைக்குச் செல் என்றனர்.  அப்போது எனது தாயாரையும், சகோதரி யையும் காவல் நிலையத்திற்கு வரச் செய் தனர். அங்கு காவல்துறையினர் எங்கள்  மூவரையும் மிரட்டினர். பின்னர் வெற்றுத் தாளில் கையொப்பம் பெற்றுக் கொண்டு அனுப்பினர். இதனைத் தொடர்ந்து 3 மாத அவகா சத்தில் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றனர். ஆகவே, நாங்கள் தற் கொலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு  கொடுத்துள்ளனர்.