கோவை, செப்.24- முகவர்களுக்கு கமிசன் குறைப்பு முன்மொழிவை ஐஆர் டிஏ கைவிட வேண்டும் என எல்ஐசி லிகாய் சங்கத்தின் கோவை கோட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. அகில இந்தயி எல்ஐசி முகவர்கள் சங்கம் (லிகாய்) கோவை கோட்ட 6 ஆவது மாநாடு தொப்பம்பட்டி பிரிவு தனி யார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கோட்ட தலைவர் எஸ்.கே.பிரேம்குமார் தலைமையில் நடைபெற்ற மாநாட்டை லிகாய் மாநில செயல் தலைவர் ஏ.பூவலிங்கம் துவக்கி வைத் தார். மாநாட்டு அறிக்கைகளை எஸ்.கோவர்த்தன், என்.லிங்கு சாமி ஆகியோர் முன்வைத்தனர். மாநாட்டை வாழ்த்தி அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இணைச்செயலா ளர் எம்.கிரிஜா, லிகாய் மாநில செயலாளர் பி.குமார், தென் மண்டல பி.என்.சுதாகரன் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில், எல்ஐசி பாலிசியின் போனசை உயர்த்திட வேண் டும். முகவர் நலவாரியம் அமைக்க வேண்டும். பாலிசிகள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும். முகவர்க ளுக்கான கமிசனை குறைக்க்கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இம்மாநாட்டில் தலைவரக பிரேம் குமார், செயலாளராக கோவர்த்தன், பொருளாளராக என். லிங்குசாமி உள்ளிட்ட நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட் டது.