districts

img

சாலையை சீரமைக்க கோரிக்கை மனு அளித்தும் கண்டுகொள்ளாத பூண்டி நகராட்சி நிர்வாகம்

அவிநாசி, ஜூன் 20- அம்மாபாளையம் இருந்து உமை யஞ்செட்டிபாளையம் செல்லும் சிதல மடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை மனு அளித்தும் திருமுரு கன்பூண்டி நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அவிநாசி ஒன்றியம் திருமுருகன் பூண்டி, நகராட்சிக்குட்பட்ட  அம்மா  பாளையத்திலிருந்து உமையஞ் செட்டிபாளையம், வழியாக அவிநாசி  மங்கலம் சாலை அமைந்துள்ளது. அவினாசியின்  பிரதான சாலை காலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல்  ஏற்பட்டுவதால் பணிக்கு குறித்த நேரங்களுக்கு செல்ல முடியாத  பொது மக்கள் இச்சாலையை பயன்படுத்துகிறார்கள். சில மாதங் களுக்கு முன்பு குடிநீர் குழாய் பதிக் கும் பணி காரணமாக சாலை சிதி லமடைந்தது. இதனை உடனடியாக சீரமைக்கக்கோரி உமையஞ்செட்டிபா ளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை சார்பில் திருமுருகன்பூண்டி நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை  மனு அளிக்கப்பட்டது.  இதைதொடர்ந்து எந்தவித நடவ டிக்கையும் மேற்கொள்ளாத நகராட்சி  நிர்வாகத்தை கண்டித்து சிதலமடைந்த  சாலையில் நாற்று நடும் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதையடுத்து திருமு ருகன்பூண்டி நகராட்சி நிர்வாகம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சாலை பணிகளை விரைந்து முடிப்பதாக உறு தியளித்தனர். இருப்பினும் இன்று வரை சாலையை சீரமைக்க எந்தவித பணிகளும் நடைபெறவில்லை. இந் நிலையில்  திங்களன்று முதியவர் ஒரு வர் அம்மாபாளையம் சாலையில் செல்லும் போது இந்தியன் ஆயில்  பெட்ரோல் பங்க் அருகில் விபத்துகுள் ளாகி சிறு காயங்களுடன் உயிர் தப்பு கிறார். மேலும், இது போன்ற விபத்து கள் நிகழாமல் இருக்க சாலையை சீர மைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட்  கட்சி மற்றும் அப்பகுதி மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.