districts

img

இருக்கு... ஆனா இல்லை..

ஈரோடு, மார்ச் 16- ஈரோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டஎலவமலைகிராமத்தில், 3ஆவது  வார்டு பகுதியில் வட்டக்கல்சேரி என்கிற தலித் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு நூற் றுக்கும் மேற்பட்ட குடும் பத்தினர் வசித்து வருகின் றனர். இந்த குடியிருப்பு பகுதியில் அனைத்து வசதிகளும் செய்யப் பட்டிருக்கிறது. இருப்பினும் அதனை பரா மரிக்க எவ்வித ஏற்பாடுகளும் செய்யப் படாமல் உள்ளதால், பயன்படுத்த முடி யாத நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள்  குற்றஞ்சாட்டுகின்றனர்.  இதுகுறித்து அக்குடியிருப்புவாசிகள் கூறுகையில், குடியிருப்பு பகுதியில் இருந்து  பேருந்து நிறுத்தம் செல்லும் பாதையில் தெரு விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங் களில் மக்கள் செல்வதற்கே அச்சம் ஏற்படும்  நிலை உள்ளது.  இதேபோல, தார்ச்சாலை  மிகவும் பழுத டைந்து காணப்படுவதால் பாதசாரிகளும்,  இரு சக்கர வாகனங்களில் செல்வோரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும்,  திறந்த வெளி கிணற்றில் மின் மோட்டார்  வைத்து குடிநீர் விநியோகம் செய்யப்படு கிறது. இதனால் மக்கள், குழந்தைகள் தவறி விழும் அபாயம் உள்ளது. அத்துடன் தேவை யில்லாத குப்பை, கூளங்களும் விழுந்து தண்ணீர் மாசடைந்துள்ளது.  இங்குள்ள கழிப்பிடத்தின் செப்டிக் டேங்க் நிரம்பி வழிகிறது. இதனால் அப் பகுதியே துர்நாற்றம் வீசுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கென சுகாதார வளாகம் தனியாக அமைக்கப்பட்டுள்ளது. இதுவும் பராமரிப்பின்றி புதர் சூழ்ந்துள்ளது.  அக்குடியிருப்பில் மக்களின் பொது பயன் பாட்டிற்காக கட்டப்பட்ட சமுதாயக் கூடம், சமையறை இல்லாமல் இருக்கிறது. இதனை  புதுப்பித்தால், இங்குள்ள மக்கள் பயன் படுத்த ஏதுவாக இருக்கும். இங்கு தேவை யான அடிப்படை வசதிகள் செய்து கொடுக் கப்பட்டுள்ளன. ஆனால் அவை உரிய முறை யில் பராமரிக்கப்படவில்லை. தேவையான மராமத்து பணிகள் செய்யப்படாமல் வீணா கிப்போகிறது. வட்டக்கல்சேரி என்பதால் பாராமுகமாக உள்ளனரா? எனத் தெரிய வில்லை. இந்த ஊர் பெயரை மாற்றினால் கூட பரவாயில்லை, என்றனர்.  ஆட்சி மாறியுள்ளது, காட்சி மாற வேண்டும் என்கிற இம்மக்களின் எதிர் பார்ப்பை ஈரோடு மாவட்ட நிர்வாகம் நிறை வேற்ற வேண்டும்.