districts

தென்மேற்கு பருவ கால மழைப்பொழிவு சிறப்பாக இருக்கும் வேளாண்மை பல்கலை. துணைவேந்தர் தகவல்

கோவை, மே 7- தென்மேற்கு பருவ கால மழைப் பொழிவு இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும் என வேளாண்மை பல்க லைக்கழக துணைவேந்தர் சீதாலட் சுமி தெரிவித்தார்.  கோவையில் உள்ள தமிழ்நாடு  வேளாண்மை பல்கலைக்கழகத் தில் வேளாண் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்த பத்தி ரிக்கையாளர் சந்திப்பு செவ்வா யன்று நடைபெற்றது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி வேளாண்மை இளமறிவியல், பட்ட யப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப் புக்கான மாணவர் சேர்க்கை குறித்து விளக்கினார். அப்போது பேசிய அவர், கோடை மழை பொழிவு தமிழகத் தின் பெரும்பாலான மாவட்டங்க ளில் மிக குறைவாக இருந்ததது. ஆனால், இன்று(புதனன்று) முதல் மூன்று நாட்களுக்கு நல்ல மழை பொழிவை எதிர்பார்க்கலாம். தென்மேற்கு பருவ கால மழைப் பொழிவு இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியாக பயிர் அறுவடை செய்யலாம் என்றார்.  மேலும் அவர் கூறுகையில், ‘120  ஆண்டுகால பழமை வாய்ந்த தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழ கத்தின் கீழ் 18 உறுப்புக்கல்லூரி களும், 28 இணைப்பு கல்லூரிக ளும் இயங்கி வருகிறது. கல்லூரி களில் இளம் அறிவியல், டிப்ளமோ,  முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப் புக்கான மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப இணைய தளம் செவ்வாய்கிழமை முதல் துவங்கப்படுகிறது.  தமிழ்நாடு வேளாண்மை பல்க லைக்கழகம், அண்ணாமலை பல்க லைக்கழகம் மற்றும் தமிழ்நாடு டாக் டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்க லைக்கழகம் ஆகியவற்றுக்கான மாணவர் சேர்க்கை tnagfi.ucan apply.com என்ற ஒரே இணையத ளத்தின் மூலம் மேற்கொள்ளப்படு கிறது. இதில் ஆன்லைன் விண்ணப் பங்களை பதிவிறக்கம் செய்து ஜூன்  6 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க  வேண்டும். தமிழ்நாடு வேளாண்மை  பல்கலைக்கழகத்தின் கீழ் 14 படிப் புகளுக்கும், அண்ணாமலை பல்க லைக்கழகத்தின் கீழ் இரண்டு படிப் புகளுக்கும், மீன்வளப் பல்கலைக் கழகத்தின் கீழ் 9 படிப்புகளுக்கும், மூன்று விதமான டிப்ளமோ படிப் புகளுக்கும் மாணவர்கள் இந்த இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இட ஒதுக்கீட்டைப் பொறுத்த வரை அரசு பள்ளிகளில் படித்த  மாணவர்களுக்கான 7.5 சதவீதம்  இட ஒதுக்கீடும், அக்ரி வோகேஷ் னல் படிப்பு படித்தவர்களுக்கு 5  சதவீதமும், மாற்றுத்திறனாளி களுக்கு 5% இட ஒதுக்கீடு உள்ளது. இவை தவிர விளையாட்டு பிரிவு  மற்றும் முன்னாள் ராணுவ வீரர்க ளின் குடும்பத்தினருக்கான இட  ஒதுக்கீட்டில் ஒவ்வொரு கல்லூரியி லும் ஒரு சீட் என தல 20 சீட்டுகள் ஒதுக்கப்படுகிறது. ஆன்லைன் விண்ணப்பம் முடிந்த பிறகு ரேங்கிங் அடிப்படையில் கட் ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். அதன் அடிப்படையில் கவுன்சிலிங் நடத்தப்பட்டு மாணவர்கள் அந் தந்த பாடப்பிரிவில் சேர்க்கப்படு வார்கள். இதற்கான விண்ணப்ப கட்டணமாக பொது பிரிவினருக்கு 600 ரூபாயும், எஸ்.சி/எஸ்.டி பிரிவி னருக்கு 300 ரூபாயும் நிர்ணயிக் கப்பட்டுள்ளது. டிப்ளமோ படிப்பு களுக்கு 200 ரூபாய் விண்ணப்ப கட்டணமும், எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 100 ரூபாயும் விண் ணப்ப கட்டணம் உள்ளது.  இதேபோல், முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கு ஜூன் 12 ஆம் தேதியோடு விண்ணப்பம் செயல்முறை முடி வடைகிறது. இதற்கு அடுத்து நுழை வுத் தேர்வு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புக்கான தேர்வு நடைபெறும். AI தொழில்நுட்பம் வளர்ந்து வரும் சூழ்நிலையில் வேளாண்மை, தோட்டக்கலை மற் றும் வேளாண்மைக்கான கருவி கள் ஆகியவற்றில் AI தொழில்நுட் பம் குறித்த பயிற்சிகள் வழங்கப்ப டுகிறது. மேலும், பழங்கள் மற்றும்  காய்கறி அறுவடையிலும் ரோபோட்டிக் கருவிகள் பயன்படுத் துவதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேளாண் படிப்புகள் முடித்தவர்க ளுக்கு அரசின் பல்வேறு துறைக ளிலும், குறிப்பாக வேளாண் துறை யில் அதிக அளவில் வேலை வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி அக்ரி தொடர்பான அரசின் அமைப்புகள், வேளாண் பொருட் கள் ஏற்றுமதி இறக்குமதி, தர  நிர்ணயம் என வேலை வாய்ப் புகள் அதிகமாகவே உள்ளது.  பொள்ளாச்சியில் ஏற்பட்ட இள நீர் தட்டுப்பாட்டுக்கான காரணங் களாக வறட்சி, வெள்ளை ஈ தாக்கு தல் மற்றும் கேரள வாடல் நோய் ஆகியவை உள்ளன. இவற்றை எதிர்கொள்வதற்காகவும் நீர் மேலாண்மை குறித்தும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி களும் ஆலோசனைகளும் வழங் கப்பட்டு வருகிறது என்றார்.