திருப்பூர், நவ. 20 - திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனையை திறந்த பிறகும், முழுமையான மருத்துவ வச திகள் இல்லாமல் தொழிலாளர்கள் பயன டைய முடியாமல் இருக்கிறார்கள். போதிய மருத்துவர்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதி களை ஏற்படுத்தி போக்குவரத்து வசதியும் செய்து தர வேண்டும் என்று அனைத்துத் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன. திருப்பூர் மாவட்ட அனைத்து பனியன் தொழிற்சங்கங்களின் கூட்டம் புதன்கிழமை காலை 11 மணியளவில் பி.என் ரோடு ஏஐடி யூசி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட் டத்திற்கு பனியன் பேக்டரி லேபர் யூனியன் ஏஐடியூசி சங்க பொதுச் செயலாளர் என்.சேகர் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் சிஐடியு பனியன் சங்கப் பொதுச்செயலாளர் ஜி.சம்பத், ஏஐடியுசி பனியன் சங்கத்தின் செயலாளர் செந்தில்குமார், எல்.பி.எப் பனியன் சங்கத்தின் தலைவர் ஜி.பாலசுப்பிர மணியம், பொருளாளர் பூபதி, ஐஎன்டியூசி சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அ.சிவ சாமி, மாவட்டத் துணைச் செயலாளர் செந் தில், எச்எம்எஸ் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.முத்துசாமி, எம்எல்எப் பனியன் சங்கச் செயலாளர் மனோகரன், மாவட்டச் செயலா ளர் மு.சம்பத், ஏடிபி தொழிற்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கண்ணபிரான், பிஎம் எஸ் தொழிற்சங்கத்தின் மாவட்டப் பொருளா ளர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்ட னர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்கள் வருமாறு: திருப்பூரில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு பூண்டி ரிங் ரோட்டில் கட்டி முடிக்கப் பட்ட இஎஸ்ஐ மருத்துவமனை தொழிலாளர்க ளின் பயன்பாட்டிற்கு இன்னும் முழுமையாக வரவில்லை. உயர் சிகிச்சைக்கான மருத்துவக் கருவிகளும் பொருத்தப்படாமல் இருக்கிறது மேலும் முழுமையாக மருத்துவர்கள் நியமிக் கப்படாமல் இருக்கிறார்கள். இஎஸ்ஐ நிர்வா கம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து தொழிலாளர்கள் நிறைந்திருக்கிற திருப்பூ ரில் இஎஸ்ஐ மருத்துவமனையை முழுமை யான பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண் டும். மேலும் இஎஸ்ஐ மருத்துவமனை அமைந்திருக்கிற இடத்திற்கும் பேருந்து நிறுத்தத்திற்கும் ஏறத்தாழ 3 கிலோமீட்டர் வரை தொழிலாளர்கள் நடந்து செல்ல வேண்டி இருக்கிறது. ஆட்டோவில் சென் றால் ஒரு தொழிலாளிக்கு ரூ.300 வரை செல வாகிறது. ஆகவே இந்த நெருக்கடியைக் போக்குவதற்கு அந்த வழித்தடத்தில் இஎஸ்ஐ மருத்துவமனையில் நின்று செல் லும் வகையில் கூடுதல் பேருந்து வசதி களை தமிழ்நாடு அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.மருத்துவமனைக்கு பின்பு சாக் கடை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் நோயாளி களுக்கு மட்டுமல்லாமல் மருத்துவமனை பணியாளர்களுக்கும் நோய் பரவுகிற அபா யம் இருப்பதால் சாக்கடை நீரை முறையாக வெளியேற்ற நடவடிக்கைகளை திருப்பூர் மாநகராட்சி மேற்கொள்ள வேண்டும். திருப் பூரில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் பனியன் மற்றும் அதை சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்கள். ஆனால் பெரும்பாலான தொழிலாளர்கள் இஎஸ்ஐ யில் உறுப்பினர்களாக இல்லாமல் இருப்பது கவலை அளிக்கிறது. ஆகவே அனைத்து தொழிலக நிர்வாகங்களும் குறிப் பாக 20 பேருக்கு மேல் பணியாற்றுகிற அனைத்து தொழிற்சாலைகளிலும் இஎஸ்ஐ கட்டாயம் பிடித்தம் செய்ய வேண்டும் என் பதை தொழிற்சாலை ஆய்வாளர்கள் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும். இஎஸ்ஐ- யில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு முறையாக அடையாள அட்டைக் கொடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இரண்டு மாத காலத்திற்குள் நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும். மேலும் காலம் தாழ்த்தி னால் அனைத்து தொழிற்சங்கங்களும் கூடி தொழிலாளர்களைத் திரட்டி வலுவான போராட்டங்களை நடத்துவது என்றும் முடிவு செய்துள்ளனர்.