விவசாயிகள் நன்றி கோவை, அக்.16- கலப்பு உரத்தை விவசாயிகள் கூட்டுறவு சங்கம் தயாரித்து ஆயிரக்கணக்கான விவ சாயிகள் பயனடைந்த நிலையில், இதற்கு 2022 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு தடை விதித்திருந்தது. இதனையடுத்து, மார்க் சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜனின் தொடர் முயற்சி யின் காரணமாக இத்தடை விலக்கிக்கொள் ளப்பட்டு மீண்டும் செயல்பட உத்தரவு வழங் கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நிலையை உணர்ந்து துரிதமாக செயல்பட்டு மீண்டும் கலப்பு உரம் தயாரிப்பதற்கான உத்தரவை பெற்றுத்தந்த பி.ஆர்.நடராஜன் எம்.பி.,க்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். துடியலூர் விவசாயிகள் கூட்டுறவு சங்கம் கோவையில் புகழ்பெற்ற விவசாயிகள் கூட்டு றவு சங்கங்களுள் ஒன்றாகும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இணைந்து நடத்தி வரும் இச்சங்கம் நீண்ட காலமாக விவசாயி களுக்கு மானிய விலையில் கலப்பு உரம் தயா ரித்து வழங்கி வருகிறது. துடியலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக் கான விவசாயிகள் இதனால் பலனடைந்து வந்தனர். கடந்த 2022 ஆம் ஆண்டில் ஒன்றிய கூட்டுறவு சங்கங்கள் இது போன்ற கலப்பு உர தயாரிப்புகளில் ஈடுபட கூடாது என்று தடை விதித்தது. இதன் காரணமாக விவசாயிகள் மானிய விலையில் உரம் பெறுவது தடைபெற்றது.
இந்த உத்தரவிற்கு எதிராக பாதிக்கப்பட்ட விவசாயிகளை திரட்டி நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் துடிய லூரில் போராட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஒன்றிய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சகத்திற்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி., கடிதம் எழுதி வலியுறுத்தினார். அத் துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து உண்மை நிலை குறித்து பேசினார். இதன் விளைவாக ஒன்றிய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சகம் ஏற்கனவே விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் , டியூகாஸ் என்று அழைக்கப்படும் இந்த சங்கம் மீண்டும் தனது கலப்பு உர உற்பத்தியை துவங்கலாம் என்றும் அதற்கு தடையெதுவும் இல்லை என்றும் மாநில வேளாண்மை இயக்குநருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. ஒன்றிய அரசு போட்ட தடையை நீக்கி மீண்டும் மானிய விலையில் உரம் தயாரிக்க அனுமதி பெறுவதற்கான போராட்டத்தில் விவசாயிகளோடு இணைந்து தலைமை ஏற்று நடத்திய பி.ஆர்.நடராஜன் எம்பி.,க்கு டியூகாஸ் நிர்வாகிகள் நேரில் சந்தித்து, விவ சாயிகளின் துயர் அறிந்து துரிதமாக செயல் பட்டமைக்கு நன்றி தெரிவித்தனர். காந்திபுரத் தில் உள்ள பி.ஆர்.நடராஜன் எம்பி., அலுவல கத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், டியூகாஸ் நிர்வாகிகள் பழனிச்சாமி, மாவட்ட வேளாண் பொருட்கள் உற்பத்தி குழு உறுப்பினரும், முன் னாள் மாமன்ற உறுப்பினருமான வி.கே.எஸ். கே.செந்தில்குமார் உள்ளிட்ட பலர் உடனி ருந்தனர்.