நாமக்கல், மே 28- எருமப்பட்டி பகுதியில் தங்கு தடையின்றி குடிநீர் விநியோ கம் செய்ய வேண்டும் என இந்திய வாலிபர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் எருமப்பட்டி ஒன் றிய பேரவை கூட்டம் ஞாயிறன்று ஜேகேபி திருமண மண்டபத் தில் வி.பிரபு தலைமையில் நடைபெற்றது. இதில் வாலிபர் சங்க மாவட்ட தலைவர் லட்சுமணன், மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாவட்ட பொருளாளர் சிவச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், தொடர்ச்சியாக எருமப்பட்டியில் மட்டும் மின்விநியோகம் தடைபடுவதை சரி செய்ய வேண்டும். 24 மணி நேரமும் செயல்படும் சந்து மது பானக்கடைகள் மூட வேண்டும். எருமப்பட்டி பேரூராட்சிக் குள் தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். அன்னபூர நகரின் சாலையோரங்களில் குப்பைகள் கொட்டி எரிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் எருமப்பட்டி ஒன்றிய தலை வராக ராமகிருஷ்ணன், செயலாளராக பிரபு, பொருளாளராக தினேஷ்குமார், துணைத்தலைவராக ஜெயராமன், துணைச் செயலாளராக ஸ்ரீதர் உட்பட 13 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது.