districts

img

எரியாத கோபுர மின் விளக்கு

தருமபுரி, ஆக.24- தருமபுரி பெரியார் சிலை முன்பு எரி யாமல்   உள்ள கோபுர மின் விளக்கின் பழுது  நீக்குமாறு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தருமபுரி நகரில் பெரியார் சிலை அருகில்  மூன்று சாலைகள் சந்திப்பு உள்ளது. இந்த சாலை தருமபுரி பேருந்து நிலையம், எஸ்.வி.  ரோடு, அரூர், திருப்பத்தூர் செல்லும் முக்கிய  சாலையாகும். இந்த மூன்று சாலைகள் சந்திப் பில்  கோபுர மின் விளக்கு உள்ளது.  இந்த மின்  விளக்கு கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக எரியவில்லை. இதனால், இப்பகுதி இருளில்  மூழ்கி உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலும், விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், இரவு நேரங்களில்  சாலையை கடந்து செல்பவர்கள் பெரும் இடர்பாடுகள் சந்திக்கிறார்கள். எனவே நகராட்சி நிர்வாகம், மின் விளக் கின் பழுது நீக்குமாறு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.