districts

img

பயன்படுத்த முடியாத வகையில் பாலம் கட்டும் உடுமலை நகராட்சி

உடுமலை, ஜன.1- உடுமலை பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுச்சாலை அருகே சாக்கடை கால்வாயின் குறுக்கே மக்கள் பயன்படுத்த முடியாத வகையில், அதிக உயரமாக பாலம் கட்டும் நகராட்சி நிர் வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் கண்ட னம் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை நக ராட்சி, திண்டுக்கல் - பொள்ளாச்சி தேசிய நெடுச்சாலை பகுதியில் அரசு அலுவலகங்கள், காய்கறி மொத்த கமிசன் கடைகள் என ஆகியவை உள் ளன. இந்த நகராட்சியில் பாதாள சாக் கடை திட்டம் செயல்பாட்டிற்கு வந்த  பிறகும், மழைநீர் வடிகால் கால்வாய் கள் சாக்கடைகள் செல்லும் கால்வா யாகதான் உள்ளது. பயன்படுத்த முடி யாத பூங்கா, பல ஆண்டுகள் வேலை நடக்கும் பேருந்து நிலையம் மற்றும் குண்டும், குழியுமாக உள்ள நகராட்சி சாலைகள் என்று உள்ளது. இந்நிலை யில் பேருந்து நிலையம் அருகே கழுத் தருத்தான் பள்ளம் அருகில் தேசிய நெடுச்சாலையை இணைக்கும் நகராட் சியின் இணைப்பு சாலையின் சாக்க டையின் குறுக்கே பல அடி உயரம் கொண்ட பாலம் கட்டபட்டு வருகிறது. இந்த பாலம் நடைமுறைக்கு வந்தால் பாலத்தின் வரும் வாகனங்கள் தேசிய நெடுச்சாலையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் கட்டப்பட்டு வருகிறது. எனவே, விபத்து ஏற்படுத்தும் வகையில் கட்டும் பாலத்தை மாற்றி, முறையாக கட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.