districts

img

இந்து முன்னணி நிர்வாகி உட்பட மேலும் இருவர் கைது

கோவை, ஜன.29-  அன்னூரில் பைனாஸ்சியர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இந்து முன் னணி நிர்வாகி உட்பட மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம், அன்னூர் அருகே  உள்ள நாகம்மா புதூர் பகுதியை சேர்ந்தவர் சரவண சுந்தரம். இவர் கரூரைச் சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகியான குட்டி (எ) ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான பைனான்ஸில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவரிடமிருந்து தனியாக  பிரிந்து வந்த சரவண சுந்தரம், தனியாக பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் ஆட்டோ ஓட்டுநரான தமிழ் செல்வன் (எ) பகவான் ஜீ என்பவருக்கு ஒரு லட்சம் ரூபாய் சீட்டு பணம் கொடுத்துள் ளார். சீட்டில் பணம் எடுத்து விட்டு பகவான் ஜீ பணம் தராமல் இழுத்தடிப்பு செய்ததால் சரவண சுந்தரத்திற்கும், பகவான்ஜீக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில்  ஆத்திரமடைந்த பகவான் ஜீ, சரவணசுந் தரத்தை தனது நண்பன் ராஜராஜனுடன் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சரவணன் சுந்தரம் உயிரிழந்தார். இதனையடுத்து பகவான் ஜீ  மற்றும் அவனது நண்பன் ராஜராஜன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த கொலையை இந்து முன்னணி நிர்வாகி குட்டி என்கிற ராஜேந்திரன் தான் திட்டமிட்டு அரங்கேற்றி யதாக உயிரிழந்த சரவண சுந்தரத்தின் உற வினர்கள் போலீசிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் குட்டி என்கிற ராஜேந்திரன் மற்றும் ரங்க நாதன் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இந் நிலையில் இருவரும் அன்னூர் பகுதியில் தலைமறைவாகி இருந்தது தெரியவந்ததை அடுத்து, போலீசார் சனியன்று இரவு அவர் களை கைது செய்தனர். இருவர் மீதும் கொலை, கூட்டு சதி செய்தல் என இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த அன்னூர் போலீசார், இருவரையும் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத் தனர்.