உதகை, ஜூன் 25- ரூ.40 லட்சம் மதிப்பிலான காச நோய் கண்டறியும் இயந்திரத்தை தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச் சந்திரன் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு வழங்கினார். உதகை ஊராட்சி ஒன்றியம், தூனேரி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில், பன்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாமை, சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் பார்வையிட்டு, பயனாளி களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கூறியதாவது, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மருத்துவ துறை முதலிடத்தில் உள்ளது. பொதுமக்கள் அதிகம் கலந்து கொண்டு பயன் பெறும் வகையில் பொது மருத்துவர், அறுவை சிகிச்சை மருத்துவர், கண், காது, மூக்கு, தொண்டை, பல் மற்றும் எலும்பு முறிவு, மனநல உட்பட 70 சிறப்பு மருத்து வர்கள் மற்றும் 290 இதர மருத்துவ பணியாளர் கள் மற்றும் சித்த மருத்துவர் வாயிலாக அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக் கப்படவுள்ளது. இந்நிலையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அடிப்படை மருத்துவ பரிசோதனை மற்றும் தேவையான ரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். உயர் சிகிச்சை தேவைப்படும் பொதுமக்களுக்கு பரிந் துரை செய்யப்பட்டு, உரிய தொடர் சிகிச்சை களை அரசு பதிவு பெற்ற முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டதில் செயல்படும் மருத்துவமனைகள் மூலமாக வழங்க ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். இதுவரை இல்லாத அளவில் நமது மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி யானது தொடங்கப்பட்டு அதில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டில் மொத்தம் 300 மாணவ, மாணவிகள் மருத்துவம் படிப்பு வருகின் றனர். இதுபோன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. எனவே, அனைவரும் அரசின் திட்டங்களை தெரிந்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பின்னர், ரூ.40 லட்சம் மதிப்பில் காச நோய் கண்டறியும் இயந்திரத்தை குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அமைச்சர் வழங் கினார். இதைத்தொடர்ந்து, 115 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியை 51 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினார். இம்முகாமில், மாவட்ட ஆட்சியர் சா.ப. அம்ரித், மாவட்ட ஊராட்சித் தலைவர் மு. பொன்தோஸ், உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மனோகரி, மருத்துவ இணை இயக்குநர் பழனிசாமி உட்பட அரசுத்துறை அலுவ லர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண் டனர்.