districts

img

வரலாற்றுச் சின்னங்களை பார்வையிட கங்கைகொண்ட சோழபுரத்திற்கு பயணம்

திருப்பூர், டிச.29- திருப்பூரிலுள்ள டாப்லைட் நூலகத்தின் சார்பில், 265 பேர் ஞாயிறன்று கங்கைகொண்ட சோழபுரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். திருப்பூர் மாவட்டம், குன்னங்கல்பாளையத்தில் டாப் லைட் என்ற தனியார் நிறுவனத்தின் சார்பில் நூல கம் செயல்பட்டு வருகிறது. நிறுவனர் வேலுச்சாமி, இயக்குனர் கௌசல்யா ஆகியோர், டாப்லைட் நூல கத்தின் சார்பில் புத்தகங்கள், வாசிப்பு, பண்பாடு தொடர்பாக பல்வேறு ஆக்கபூர்வமான நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அதன்ஒருபகுதியாக வரலாற்று சிறப்புமிக்க இடங்களை பார்வையிட்டு வரு வது என்ற நோக்கத்தில், மாணவ, மாணவிகள், எழுத்தா ளர்கள், கவிஞர்கள் ஆகியோரை உள்ளடக்கிய 265 பேரைக் கொண்ட ஒரு குழுவினர் கங்கைகொண்ட சோழ புரம் மற்றும் உடையார்பாளையம் ஆகிய வரலாற்றுச் சின்னங்கள் கொண்ட ஊர்களை சென்று பார்வையிட ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி, ஞாயிறன்று அதி காலை வேலுச்சாமி, கௌசல்யா ஆகியோர் தலைமை யில் 265 பேர் ஐந்து பேருந்துகளில் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு புறப்பட்டுச் சென்றனர். கிட்ஸ் கிளப் பள்ளி குழுமத்தின் தலைவர் மோகன் கார்த்திக் கொடிய சைத்து இந்த பயணத்தை தொடக்கி வைத்தார்.