districts

img

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி

பள்ளிபாளையம், ஜூன் 5- ஒடிசா ரயில் விபத்தில் மரணம டைந்த அப்பாவி மக்களுக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வாலிபர், மாதர் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத் தப்பட்டது. ஒடிசா மாநிலம், பாலசூர் மாவட் டம், மகா நகர் பஜார் ரயில் நிலையம் அருகே, கடந்த ஜூன் இரண்டாம் தேதி இரவு 7 மணி அளவில், 3 ரயில்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்துக் குள்ளானதில், மகாநகர் பஜார் பகுதி யில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டு இருந்த தண்டவாளத்தில், கோரமண்டல் ரயில் நுழைந்து சரக்கு ரயிலின் மீது மோதி யது. இதில் கோரமண்டல் ரயிலின்  பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் சுமார் 275க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 1000க்கும் அதிகமானோர் பல்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ் சலி செலுத்தும் விதமாக, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத் துள்ள வசந்த நகர் பேருந்து நிறுத்த பகுதியாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற் றது. இந்நிகழ்விற்கு, சங்கத்தின் ஒன்றிய செயலாளர் நவீன் தலைமை  வகித்தார். மாவட்ட தலைவர் லட்சு மணன், மாவட்டக்குழு உறுப்பினர் கௌசல்யா மற்றும் வாலிபர் சங்க  நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மெழுகுவத்தி ஏற்றி அஞ் சலி செலுத்தினர். இதில் பலர் கலந்து கொண்டனர்.

கோவை 

கோவை, காந்திபுரம் அரசு விரைவு பேருந்து  நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் யு.கே. சிவஞானம் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில், கட்சியின் மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன், செயற்குழு உறுப்பினர் கே.மனோரகன், கே.எஸ்.கனகராஜ் உள்ளிட்ட திரளானோர் பங் கேற்று, ஒடிசா ரயில் விபத்தில் இறந்த வர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். தருமபுரி  ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்க ளுக்கு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில், தருமபுரி செங்கொடிபுரத்தில், மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச் சிக்கு நகர செயலாளர் எஸ்.நிர்மலா ராணி தலைமை ஏற்றார். இதில், முன் னாள் மாவட்ட செயலாளர் எஸ்.கிரை ஸாமேரி, ஒன்றிய செயலாளர் எம். மீனாட்சி, நகர தலைவர் ஒய்.சுபா மற் றும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம். மாரிமுத்து, மலைவாழ் மக்கள் சங்கத் தின் மாவட்ட செயலாளர் கே.என்.மல் லையன், பால் உற்பத்தியாளர் சங்க நிர்வாகி என்.கந்தசாமி, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எம்.அருள்குமார், நிர்வாகி குப்பன், எஸ்.மணிகண்டன் உ ள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். ஈரோடு ஈரோடு, சூரம்பட்டி நால்ரோல் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத் திய நிகழ்விற்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்ட செயலாளர் ஆர்.ரகுரா மன் தலைமை ஏற்றார். இதில்,  கட்சி யின் மூத்த தோழர் கே.துரைராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.கோமதி, ஜி.பழனிசாமி, எஸ்.சுப்ர மணியன், சி.முருகேசன்  உள்ளிட்ட திர ளானோர் பங்கேற்றனர். முன்னதாக இந் நிகழ்வில், ஏராளமான வடமாநில தொழி லாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி இறந்த வர்களுக்கு இரங்கல்களை தெரிவித்த னர்.