districts

img

விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவிற்கு அஞ்சலி

ஈரோடு, செப்.29- ஈரோட்டில் நடைபெற்ற விவசாயி கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமி நாதன் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப் பட்டது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவ லக கூட்டரங்கில், ஆட்சியர் ராஜகோ பால் சுன்கரா தலைமையில் விவசாயி கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப் போது, விவசாயிகளிடமிருந்து 107 கோரிக்கை மனுக்களை பெற்று அலுவ லர்களிடம் வழங்கி உடனடி நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியர் உத்தரவிட்டார். அப்போது அவர் பேசுகையில், ஈரோடு மாவட்டத்தின் இயல்பான ஆண்டு சரா சரி மழையளவு 733.44 மிமீ ஆகும். நடப் பாண்டில் வெள்ளியன்று வரை 424.13 மி.மீ மழை பெய்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 71.33  அடியாகவும், 11.51 டி.எம்.சி நீர் இருப்பு உள்ளது என்று தெரிவித்தார். மேலும்,  கலைஞரின் அனைத்து கிராம ஒருங் கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட மானது தேர்வு செய்யப்பட்ட 42 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுள் ளது. இந்த ஊராட்சிகளில் உள்ள தரிசு நிலங்கள் கண்டறியப்பட்டு அவற்றை சாகுபடிக்கு கொண்டுவந்து, உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தடப்பள்ளி, அரக்கன்கோட்டை ஆயக்கட்டு பாசன பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட நெல் அறுவடை பணிகள்  முடிவடையும் தருவாயில் உள்ளன.  அறுவடை செய்யப்பட்ட நெல் தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத் தின் மூலம் 36 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட் டுள்ளன. அவற்றில் இதுவரை 21 ஆயி ரத்து 574 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது, என ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்தார். முன்ன தாக, இக்கூட்டத்தில் வேளாண் விஞ் ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறை விற்கு அனைவரும் எழுந்துநின்று மௌன அஞ்சலி செலுத்தினர்.