districts

img

மக்கள் தலைவர் என்.சங்கரய்யாவுக்கு அஞ்சலி

ஈரோடு, நவ.18- விடுதலைப்போராட்ட வீரர்,  மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழர் என்.சங்கரய்யா மறைவைய டுத்து, ஈரோடு மாவட்டம், அந்தியூ ரில் இரங்கல் ஊர்வலம் நடைபெற் றது. தவுட்டுப்பாளையம் மார்க்கெட் பகுதியில் இருந்து துவங்கிய ஊர்வ லம், பல்வேறு பகுதி வழியாக சென்று, தேரடித்திடலை அடைந் தது. இரங்கல் கூட்ட நிகழ்விற்கு, சிபிஎம் அந்தியூர் தாலுகா செயலா ளர் ஆர்.முருகேசன், தலைமை ஏற்றார். இதில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் (திமுக) ஏ.ஜி.வெங் கடாசலம், சிபிஎம் மாவட்ட செயலா ளர் ஆர்.ரகுராமன், சிபிஐ வி.பி.குண சேகரன், மதிமுக அந்தியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ம.இரகுபதி, காங்கிரஸ் முருகானந்தம், விசிக வடக்கு மாவட்ட செயலாளர் கு.ஈஸ்வரன், திமுக பேரூர் கழக செயலாளர் எஸ்.கே.காளிதாஸ்,  சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஆர்.விஜயராகவன், விசிக ஒன்றி யச் செயலளர் கு.தங்கராசு,  காங்கி ரஸ் தெற்கு வட்டாரத் தலைவர் பழனி முத்து உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.  கோவை இதேபோன்று, எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் கீரணத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு சிதம்பரம் தலைமை வகித்தார். இதில், சிபி எம் மாவட்ட செயற்குழு உறுப்பின ரும், கீரணத்தம் ஊராட்சி துணைதலை வருமான ஆர்.கோபால், கீரணத்தம் ஊராட்சி மன்றத்தலைவரும் திமுக ஒன்றிய துணைச்செயலாளாருமான ராசு (எ) பழனிசாமி, அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான சுகு மார், திமுக ஒன்றிய கவுன்சிலர் கருப் பசாமி, கொமதே கட்சியின் மாவட்ட  நிர்வாகி தனுஷ் கோடி , ஓய்வுபெற்ற தலைமைஆசிரியர் பழனிசாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று இரங்கல் உரையாற்றினர்.  மக்கள் தலைவா் என்.சங்கரய்யா மறைவுக்கு, கோவை சூலூர் அண் ணா சீரணி கலையரங்கில் அரசியல்  கட்சி சாா்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வெள்ளியன்று நடைபெற் றது. இதில், சிபிஎம், திமுக, சிபிஐ,  மதிமுக, விசிக உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர்.