districts

img

அவதிப்பட்ட பெண் யானைக்கு சிகிச்சை

மேட்டுபாளையம், மார்ச் 17- மேட்டுப்பாளையத்தில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட பெண்  யானையை கும்கி யானையின் உதவி யுடன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப் பட்டு மேல் சிகிச்சைக்காக டாப்சிலிப்  வரகலியாறு முகாமிற்கு லாரி மூலம்  கொண்டு செல்லப்பட்டது. கோவை மாவட்டம்,  மேட்டுப் பாளையம் அருகே காரமடை வனச் சரகம், வெள்ளியங்காடு மேற்கு சுற்றுக்குட்பட்ட பகுதியில் கடந்த 14  ஆம் தேதி அதிகாலை  முதல் காட்டு யானை ஒன்று வனப்பகுதியை விட்டு வெளியேறி பட்டா நிலத்தில்  புகுந்து அங்கும் இங்கும் அலைந்து தவித்துக்கொண்டு இருப்பதாக கார மடை வனத்துறையினருக்கு தகவல்  கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ  இடத்திற்கு வனத்துறையினர் விரைந்து சென்று ஆய்வு நடத்தி யதில்  சுமார் 15 வயது மதிக்கத் தக்க  பெண் காட்டு யானை  வாய்  பகுதியில்  காயத்துடன் உடல் மெலிந்த நிலை யில் சோர்வுடன் இருப்பது கண்ட றியப்பட்டது. இது குறித்து வனத் துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல்  தெரிவிக்கப்பட்டது. தகவலை யடுத்து வனத்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு மற்றும்  ஆதிமாதையனூர்  கிராமங் களில் உள்ள தோட்டங்கள் மற்றும்  சுற்றுப்புற பகுதிகளில் வியாழக் கிழமை முதல் தீவிர கண்காணிப்பு  பணியில் ஈடுபட்டு வந்தனர். வனத் துறையினரின் தீவிர கண்காணிப் பில் வெள்ளியங்காடு கிராம பகுதி யில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் யானை  நின்று கொண்டிருப்ப்து  வெள்ளி யன்று காலை தெரியவந்தது. 

இது குறித்து தகவல் கிடைக்கப் பெற்றதும் மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தலைமையில், மருத் துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு  சென்றனர். காயம்பட்ட யானையை  பிடிக்க வசதியாக சின்னதம்பி என்ற  கும்கி யானை வரவழைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வன கால்நடை  மருத்துவர்கள் கும்கி யானையின் உதவியுடன், யானைக்கு 2 முறை மயக்க ஊசி செலுத்தினார்கள். இதனால் யானை மயக்க நிலையை அடைந்தது. அதன் பின்னர் கும்கி யானை சின்னத்தம்பி உதவியுடன் அந்த யானையின் கால்கள்  கட்டப் பட்டது. இதனையடுத்து  மருத்துவர் கள் யானையின் அருகில் சென்று  மருத்துவ பரிசோதனை செய்தனர்.  பரிசோதனையில் உடல் நலம்  குன்றிய யானை கும்கி யானை யல்ல. அது  சுமார் 15 வயது மதிக்க தக்க பெண் யானை என தெரிய வந்தது. அதன் உள்நாக்கு பகுதி யில் ஒன்றை சென்டிமீட்டர் அளவுக்கு  காயம் ஏற்பட்டு நாக்கில்  வெட்டு காரணமாக  யானையால் தீவனங் களை உட்கொள்ள முடியாமலும் தண்ணீரை குடிக்க முடியாமலும் இருப்பது தெரிய வந்தது. பிற யானைகளுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக காயம் ஏற்பட்டு சுமார் ஒரு மாத காலமாக இந்த யானை அவதிப்பட்டு இருக்கலாம் என்றும் தற்போது யானையின் நாக்கு பகுதி  முழுமையாக செயல் இழந்து  விட்டதும் மருத்துவ ஆய்வில் கண்ட றியப்பட்டது. இதனைத்தொடர்ந்து, கும்கி யானை சின்னத்தம்பி யானையை பின்னால் இருந்து தள்ள வனப்பணி யாளர்கள் கயிறு கட்டி இழுத்து மரத் தில் கட்டினார்கள் அதன் பின்னர்  அரசு வன கால்நடை மருத்துவர்கள் சுகுமாரன் சதாசிவம் ஆகியோர் யானைக்கு நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வலி நிவாரண மருந்துகளை ஊசி மூலம் செலுத்தினார்கள். மேலும், யானையின் உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்க குழாய் மூலம்  ஆசன வாய் வழியாக குளுக்கோஸ் கலந்த 35 லிட்டர் தண்ணீர் செலுத் தப்பட்டது. யானையின் உடல்நிலை  சரியாக பதினைந்து தினங்கள் சிகிச்சை அளிப்பது அவசியம் என்ப தால் அதனை டாப்சிலிப் யானைகள்  முகாமிற்கு அழைத்து சென்று மரக் கூண்டில் வைத்து தொடர் சிகிச்சை யளிக்க முடிவெடுக்கப்பட்டது. இதனையடுத்து, காட்டு யானை கும்கி யானையின் உதவியுடன் வனத் துறை லாரியில் ஏற்றப்பட்டது. லாரி யில் நிறுத்தி கட்டப்பட்ட யானை வனத்துறை அதிகாரிகளின் மேற் பார்வையில் பாதுகாப்பாக டாப் சிலிப் முகாம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் மேட்டுப் பாளையம் மலையடிவார கிராமங் களில் இரு நாட்களாக ஏற்பட்டிருந்த பரபரப்பான சூழ்நிலை சகஜ நிலைக்கு திரும்பியது.