districts

img

போக்குவரத்து ஊழியர்கள் இரண்டாவது நாளாக போராட்டம்; கைது

தருமபுரி நகர் பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிஐடியு போக்குவரத்து சங்க மண்டல பொதுச்செயலாளர் எஸ்.சண்முகம், தலைவர் சி.முரளி, சிஐடியு மாநிலச் செயலாளர் சி.நாகராசன், அண்ணா தொழிற்சங்க நிர்வாகி எம்.பி.லட்சுமணன், பிடிஎப் நிர்வாகி ராஜா, ஏஐடியுசி மாநில துணைத்தலைவர் ரவி, ஓய்வுபெற்றோர் அமைப்பின் மாநில துணைத்தலைவர் கே.குப்புசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே சிஐடியு போக்குவரத்து ஊழியர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதில் சங்கத்தின் மண்டல பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மண்டல தலைவர் செம்பன், சிஐடியு மாவட்டச் செயலாளர் எ.கோவிந்தன், தலைவர் டி.உதயகுமார், மாநில துணைத்தலைவர் எஸ்.கே.தியாகராஜன், ஓய்வுபெற்றோர் அமைப்பின் மண்டலச் செயலாளர் அன்பழகன் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கைதாகினர்.