districts

img

ஒப்பந்த ஊழியர்களை பணியமர்த்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு

உதகை, ஜன.31- அரசு போக்குவரத்து கழ கத்தில், ஒப்பந்த ஊழியர் களை பணியமர்த்தும் நட வடிக்கைக்கு எதிர்ப்பு தெரி வித்து, உதகையில் அரசு  போக்குவரத்து கழக ஊழி யர் சங்கத்தினர் வெள்ளி யன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த ஊழி யர்களை பணியமர்த்தும் திட்டம் செயல்படுத் தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே அரசு போக்குவரத்து கழக ஊழி யர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  அதன் ஒருபகுதியாக நீலகிரி மாவட்டம், உதகை பேருந்து நிலையத்தில் சிஐடியு, ஏஐடியுசி, அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங் கத்தினர் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு மண்டலச் செயலாளர் ரமேஷ், ஏஐடியுசி மண் டலத் தலைவர் தங்கதுரை ஆகியோர் தலைமை வகித்தனர். சிஐடியு துணை பொதுச்செயலாளர் கணேசன், ஏஐடியுசி பொதுச்செயலாளர் சையது இப்ராஹிம் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசி னர். இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வர்கள் கூறுகையில், கோவை கோட்டத்தில் ஒப்பந்தம் மூலம் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். இதனால், கோவை யில் தொடங்கி இருக்கும் இந்த ஒப்பந்த முறை படிப்படியாக தமிழகம் முழுவதும் நடை முறைப்படுத்தப்படும். நிரந்தர தொழிலாளர் கள் பணி நியமனம் இருக்காது. இதனால், சமூகநீதி கோட்பாட்டின் படி இட ஒதுக்கீடு புறக்கணிக்கப்படும்.  ஒப்பந்த தொழிலாளர்க ளுக்கு முன்னுரிமை வழங்கி நிரந்தர தொழி லாளர்களின் பணி பறிக்கப்பட்டு பொருளா தார ரீதியான பாதிப்புகள் ஏற்படும். இதனால், எதிர்காலத்தில் அரசு போக்குவரத்து கழகம் முழுமையாக தனியார்மயமாகக் கூடிய அபா யம் உள்ளது. எனவே போக்குவரத்து கழகங் களில் தனியார்மயப்படுத்துவதை உடனடி யாக அரசு கைவிட வேண்டும், என்றனர்.